Skip to main content

இவிங்களத் தெரியுமுங்களா...?

இவிங்களத் தெரியுமுங்களா...?

தெரிஞ்சதுன்னா அட்ரச சொல்லிப்போட்டு போங்க... ஏதோ பேமசான டயலாக்கெல்லாம் சொல்லீருக்காக போல! கேட்டுத் தெரிஞ்சுக்கலாமுன்னுதேன்...


1. காரமடை ரங்கநாதன்

2. அம்சவேணி பழனிச்சாமி

3. குஞ்சு கவுண்டர்

4. தவசி



5. நாகராஜசோழன் M.A.

6. கோபால், LIC ஆபீசர்

7. பன்னிக்குட்டி ராமசாமி



8. பழனி சக்திவேலு



9. கமலி




10. கோவாலு

11. பாக்கியலச்சுமி

12. ஒத்த மீசை குப்புசாமி

13. வைத்தீஸ்வரி

14. செம்புலி

15. நீலவேணி



16. ராசப்பா

17. பயில்வான் பாலகுரு, வலையபாளையம்

18. காளிங்ஸ்

19. வெங்குடான்

20. குண்டலகேசி

Comments

Anonymous said…
போங்கடா கோமுட்டித்தலையனுங்களா..
என்ற பேரு எப்புடி விட்டுப்போச்சு??
அதெல்லாம் இருக்கட்டும்ங்க இளவஞ்சி. இந்த 'உக்கடம்' போட்டோ நீங்க புடிச்சதா? மீன் மார்க்கெட்டுக்கு தெக்கால, பஸ் ஸ்டாண்டுக்கு மேபுறம் இருக்குதே..அந்த ஏரிதானுங்க?
கைப்புள்ளையும் விட்டுப்போயிருச்சே.
2. திருமதி பழனிச்சாமி

4. சின்னக் கவுண்டர்

5. அமைதிப்படை அமாவாசை

9. காதல் கோட்டை தேவயாணி

10. சின்னவீடு - பாக்யராஜ்

11. சதிலீலாவதி - கல்பனா

13. எஜமான் - மீனா

14. ராசுக்குட்டி - பாக்யராஜ் பி.ஏ
G.Ragavan said…
// "ஆல் இன் ஆல்" அயகுராசா said...
போங்கடா கோமுட்டித்தலையனுங்களா..
என்ற பேரு எப்புடி விட்டுப்போச்சு?? //

// ILA(a)இளா said...
கைப்புள்ளையும் விட்டுப்போயிருச்சே. //

அதுக்குக் காரணம்...அவங்க ரெண்டு பேரும் பாண்டி நாடு. கொங்கு நாடு கெடையாது.

சரிதானா இளவஞ்சி?
ilavanji said…
"ஆல் இன் ஆல்" அயகுராசா,

// போங்கடா கோமுட்டித்தலையனுங்களா..
என்ற பேரு எப்புடி விட்டுப்போச்சு?? //

மிஸ்டர் கவுண்டபெல், நல்லா படிங்க! மொதபேருல ஒளிஞ்சு இருக்கறது யாரு?

செல்லமுத்து,

// இந்த 'உக்கடம்' போட்டோ நீங்க புடிச்சதா? //

நானில்லீங்... நம்ம ராசான்னு நினைக்கறேன்!

// மீன் மார்க்கெட்டுக்கு தெக்கால, பஸ் ஸ்டாண்டுக்கு மேபுறம் இருக்குதே..அந்த ஏரிதானுங்க? //

அதே! அதே! தண்ணி எப்படி தளும்புது பார்த்தீங்களா! காணக்கிடைக்காத காட்சி! :)

இளா,

கைப்புள்ள பக்கத்து நாடு! கொங்கு நாட்டுள்ளால ஏதாச்சும் வேசங்கட்டியிருந்தா சொல்லுங்க.. கோர்த்து விட்டுறலாம்! :)
ilavanji said…
சிபியாரே,சொன்னவரைக்கும் உமது விடையெல்லாம் கரெக்கிட்டுதேன்! ஆனா ஒத்துக்கபட மாட்டாது!

அவிங்க சொன்ன ஃபேமசு டயலாக்கோட சொன்னாத்தேன் ஃபுல் மார்க்கு! :)

ஜீரா,

// பாண்டி நாடு. கொங்கு நாடு// கேக்கவே புல்லரிக்குது! அடுத்தவாரம் வீக்கெண்டுல அண்டைநாடான பாண்டிநாட்டுக்கு படையெடுத்துருவமா?! :)))
18 - மேட்டுக்குடி கவுண்டமணி (அடங்கொன்னியா!!)
Anonymous said…
இவிகள்ல நமக்குத்தெரிஞ்சவங்கள முதல்லியே எல்லாரும் சொல்லிப்போட்டாங்க. இனி எனத்தப்பண்ணறது. விடைகள் எப்போன்னு பாத்துட்டு இருக்கவேண்டியதுதான்
ilavanji said…
சினேகிதன்,

அது! மீதி 19யையும் சாய்சுல விட்டுப்போட்டிங்களா?! வெளங்குனாப்புலதானுங்.. :)

சின்ன அம்மிணி,

சிபியாரு பேருமட்டுந்தேன் சொல்லியிருக்காரு. நீங்க சும்மா ஒக்காந்திருக்காம அதுக்கெல்லாம் வசனத்த புடிங்க... அப்பறமா யூட்ட்யூப்புல படத்தை தேடி சேர்த்து விட்டுருவோம்! :)
2)பழனிசாமி- கட்டினா ஒரு டீச்சர் பொண்ணத்தான் கட்டுவேன்!
4) தவசி- தோள்ல துண்டப்போட்ட தீர்ப்பு சொல்ல போரார்!
5) ராஜராஜ் சோழன் - சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ!
6) கோபால் - எப்படி புடிச்சு எழுதினாலும் இந்த விரல்ல மட்டும் இங் ஒட்டிகுதுபா!
7) பன்னிகுட்டி ராமசாமி - அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
8)பழனி சக்திவேலு - என்ற வூட்டுகாரர் ட்ராக்டர் .. அதன் எலும்புலாம் ஒடைஞ்சா கடுப்போடுவாஙலே அது ...
9)கமலி - இதயத்துல்ல ஆரம்பிச்சு கண்ணுல முடியுர காதல் எங்களுது ...

மீதியா யாராவது வந்து சொல்லுங்கப்பா அம்புட்டு தான் நமக்கு தெரியும்!
"எது என்ன தெரியாதா...நான் இதே ஊரு தான்யா. எட்டு வருஷமா இதே ஊருல தான் இருக்கேன்"

"என்னை என்ன இளிச்சவாயன்னு நெனச்சியா...எட்டு வருசமா எனக்கு தெரியாம இந்த ஊருல எந்த சந்துலடா இருந்தே? சைக்கிள் கெடையாது"

"ஏன்யா நான் இந்தியநாட்டைச் சேர்ந்த ஒரு பிரஜை எனக்கு சைக்கிள் இல்லையா?"

"உன் பேரு என்னப்பா"

"காரமடை ரங்கநாதன்"

"ரங்கநாதங்கிற பேருக்கெல்லாம் சைக்கிள் குடுக்கறதில்ல"

"தர மாட்டே?"

"எட்டி ஒதைக்கிறதுக்குள்ள ஓடிப் போயிரு"
"ஹை ஐ ஆம் குண்டலகேசி...வாட் இஸ் யுவர் நாம்"

"மந்தாகினி"

"ஸ்வீட் நாம்"

-------------------------

"மாப்பிளை என் சவுத் இந்தியன் டயானாவை ஒரு தரம் வந்து பாருப்ப்பா"

"கொஞ்சம் இருப்பா ரொமான்ஸ் பண்ணிட்டு வந்துடறேன்"

"இவனுக்குண்டான கெட்ட பழக்கமே இதான்...தேவையான நேரத்துல காணாமப் போயிடுவான்"
"தோள்ல இருக்கற மேல்துண்டு எறங்கற வரைக்கும் தான் நான் மனுசனா இருப்பேன்" - something like that...சின்னக் கவுண்டரில் தவசி
பன்னிக்குட்டி ராமசாமி : "செட்டியார் மதர்"
இதையும் கொஞ்சம் பாருங்ணா...

நல்ல கருத்துள்ள பதிவு
Anonymous said…
1. காரமடை ரங்கநாதன்
வைதேகி காத்திருந்தாள்
க.மணி: உன் பேரு என்ன?
: காரமடை ரங்கநாதன்
க.மணி: காரமடை ரங்கநாதனுங்குற பேருக்கெல்லாம் சைக்கிள் தரதில்ல.

2. அம்சவேணி பழனிச்சாமி
திருமதி பழனிச்சாமி

3. குஞ்சு கவுண்டர்
ராம்கி,க.மணி மற்றும் சங்கவி நடித்த படம்.

4. தவசி
சின்னக்கவுண்டர்.

5. நாகராஜசோழன் M.A.
அமைதிப்படை
நாகராஜசோழன் M.A. s/o Rajendra solan GS/o Rajaraja solan.
என்ன ஒரே ராஜாக்கள் பேரா சொல்லுரீங்க

7. பன்னிக்குட்டி ராமசாமி
சூரியன்
க.மணி: இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா

10. கோவாலு
சின்ன வீடு
கோவை சரளா: அட கோவாலு,

11. பாக்கியலச்சுமி
சின்ன வீடு
கல்பனா

16. ராசப்பா
புது மனிதன்
க.மணி: தாளத்தோட பீத்தப்பொண்ணு இல்ல மூத்தபொண்ணு

17. பயில்வான் பாலகுரு, வலையபாளையம்
க.மணி: சார்,பயில்வான் பாலகுருன்னு ஒரு பன்னிப்பய வீட்டுல குடியிருந்தேன் சார்.

18. காளிங்ஸ்
காளிங்ஸ் அவங்க சிரிச்சது உங்களப்பாத்துதான்

19. வெங்குடான்
இன்று போய் நாளை வா
ஏய் குருவா!!
ilavanji said…
வவ்வால்,

8 மார்க்கு! அருமை! :)

டாக்குடரு சம்சாரம் இதவிட இன்னொரு அருமையான டயலாக்கு க்ளைமாக்சுல சொல்லுவாங்க! அது என்ன? :)

கைப்புள்ள,

இருந்தாலும் உமக்கு இவ்வளவு மெமரி இருப்படாது! அப்படியே... கதைவசனம் புத்தகத்த படிக்கற கணக்கா புட்டுப்புட்டு வைக்கறியேயப்பு! :) உம்ம பதிவுக்கான சுட்டிக்கு நன்றி!
ilavanji said…
delphine,

// எங்கிட்ட வீட்டுக்கு லோன் வாங்கித்தர்ரேன் என்று சொல்லிட்டு காணாமப்போனவர். கண்டு பிடிச்சு கொடுங்க //

ஆளு பகல்ல வள்ளுவரு கோட்டம் பக்கத்துல சுத்தறதா காத்துவழி நியூசு! :)

அனானி,

யாரைய்யா நீர்? இத்தனையும் புட்டுப்புட்டு வைச்சுட்டு பேரைக்கூட சொல்லாம போயிருக்கீரு! இதுக்கே உமக்கு டாக்டர் பட்டம் கொடுக்கனும்! சீக்கிரம் பேரோட வாங்க!

வெங்குடான் கண்டுபுடிச்சிருக்கீருன்னா நெசமாவே அது தெறமதேன்! :)
ilavanji said…
மிச்சமிருக்க ஆளுங்க... Any Takers?!

3. குஞ்சு கவுண்டர்

12. ஒத்த மீசை குப்புசாமி

15. நீலவேணி

20. குண்டலகேசி
Anonymous said…
12. ஒத்த மீசை குப்புசாமி
- நானே ராசா நானே மந்திரி - இஸ்கலக்கடி லாலா சுந்தரி கோலா கொப்பர கொய்யா - மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்

15. நீலவேணி - மிசஸ்.சரவணன்(s/o பழனிச்சாமி) - அருள் படத்தில்.

குஞ்சுகவுண்டரும்,குண்டலகேசியையும் கண்டுபுடிச்சுட்டாங்கோவ்...
ஏங்க... என்னையும் சேத்துக்குவீங்கள..?
ilavanji said…
நான் அவன் இல்லை,

நீர் தான் முன்ன வந்த அனானியா? உம்ம ஜெனரெல் நாலெட்ஜை அடிச்சுக்கவே முடியாது போல! :)

रा. वसन्त कुमार्.,

konguvaasal@gmail.com கு ஒரு மெயில் தட்டுங்க! :)

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)