Skip to main content

Posts

Showing posts from January, 2007

நம்ம ஊரு...நல்ல ஊரு...

அய்யாமார்களே,அம்மாமார்களே... உங்களது கோவை தினங்களை நினைவு படுத்தும் விதத்துல இந்த ஒரு போட்டி. 1.கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட ஒன்றைப் பிரிக்கவும் அ)கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கணபதி சில்க்ஸ் அடையார் ஆனந்த பவன் சென்னை சில்க்ஸ் ஆ)கற்பகம் நிர்மலா அவினாசிலிங்கம் விசாலட்சி 2."செவன் இஸ் ஹெவன்" என்றெல்லாம் சரித்திரப் புகழ் வாய்ந்த 7-ஆம் நெம்பர் பேருந்து செல்லும் பாதையில் உள்ள வழித்தடங்களைக் கூறவும். 3.ஹோப் காலேஜ் : கோவையிலிருந்து அவினாசி மார்க்கமாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு முக்கிய சந்திப்பு.இந்தப் பகுதியினைச் சுற்றிலும் ஏகப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.இந்தப் பகுதிக்கு "ஹோப் காலேஜ்" என்ற பெயர் வந்தது? 4.இணைந்த கைகள் வெளியானதால்,மூடப்பட்ட திரையரங்கம் எது? 5.கோவையில் தொடங்கி மற்ற நகரங்களிலும் வெற்றிக் கொடி கட்டி இருக்கும் வியாபார நிறுவனங்கள் 4 கூறவும். 6."இணையாத பாலம்.இருந்தென்ன லாபம்" - சமீபகாலத்தில் பிரபலமான இந்த ஸ்லோகன் எந்த பிரச்சினையை நினைவூட்டுகிறது??

4:நம்ம ஊரு சமையலேய்...

பச்சைக் கொள்ளு ரசம் தேவையான பொருட்கள் கொள்ளு - கால் கிலோ புளிக்கரைச்சல் - ஒரு கப் காய்ந்த மிளகாய் - 3 பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - 2 ஈர்க்கு சீரகம் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி செய்முறை கொள்ளை சுத்தம் செய்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் வேகவைத்து எடுத்து மசித்து கொள்ளவும். ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு வருத்துகொள்ளவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து பச்சை மிளகாய் மற்றும் புளிக்கரைச்சலை ஊற்றவும். 4 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். மசித்து வைத்த கொள்ளுவை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும். நன்கு கொதி வந்ததும் இறக்கி வைத்து பறிமாறவும். சளி,காய்ச்சலுக்கு சிறந்த மருந்து இது.

3:சிறுதுளி பெருவெள்ளம்

பானீ,வெள்ளம்,ஜல்,நீரு,நீலு என்று வெவ்வேறு மொழிகளில் அழைக்கப்படும் நீரின்றி அமையாது உலகு.அது சரி வெறுங்கையில் முழம் போட முடியுமா? மழை இன்றி இவ்வுலகின் நீர் ஆதாரங்கள் தான் செழிக்குமா? ஆறு,ஏரி,குளம்,கிணறு,ஓடை,அருவி என்று இந்த உலகிலுள்ள பல்வேறு நீர்வளங்களுக்கு மழையே ஆதாரம்மழை பெய்யாமல் பொய்க்கும்போது தான் அதனுடைய அருமையை உணர்வோம்.சிறுவாணி,புழல் ஏரிகளின் தற்போதைய நீர்வரத்து,அடிப்பம்பு,லாரித் தண்ணீர்,மழை நீர் சேகரிப்புத் திட்டம் என்று ஆயிரம் விஷயங்களைப் பேச,சிந்திக்கத் துவங்குவோம்.. பணத்தைப் பல தலைமுறைகளுக்குச் சேமித்துவைக்கத் துடிக்கும் நாம்,நீர் போன்ற இயற்கை வளங்களைப் பொறுத்த மட்டிலும் அவற்றின் மதிப்புணரா தற்குறிகளாய் இருக்கிறோம்.இதே நிலைமை நீடித்து வந்தால் அடுத்த உலகயுத்தம் நீரின் முன்னிட்டே இருக்கும் என்று கூற முடியும்.யார் கண்டது,இந்தியாவே அது போன்றதொரு யுத்தம் துவங்குமிடமாய் இருக்கக் கூடும். ஐ.நா. சபையின் உலக நீர்ப்பயன்பாட்டு அறிக்கையின் படி தற்போது உலகிலுள்ள 6 பில்லியன் மக்கள்கூட்டம் ஏறத்தாழ பூமியிலிருக்கும் 54 % தூயநீரினைப் பயன்படுத்தி வருகிறது.2025 ஆம் ஆண்டில் இது 70% ஆக அதிகரிக்கக்

2: கொங்குதேசம்

கொங்குதேசம் அல்லது கொங்குநாடு'' ன்னு பொதுவா சொல்றது, கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தையே பெரும்பாலும் குறிச்சாலும், அதன் பரப்பளவு கொஞ்சம் விஸ்தாரமானதுங்க. இன்னைக்கு பல்வேறு மாவட்டங்களா தாலுக்காவா பிரிஞ்சிருக்கிற 'பழநி, தாராபுரம், கரூர், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம், ஈரோடு, தர்மபுரி, சத்யமங்கலம், நீலகிரி, அவிநாசி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, இப்படி எல்லா ஊர்களையும் உள்ளடக்கியது தான் கொங்குநாடு. தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டிய மன்னர்கள் மட்டுமில்லாம, ஹவுசல்ய மன்னர்களும் முகம்மதிய மன்னர்கள் ஆட்சிக்கும் உட்பட்டிருந்த கொங்குதேசம், 1799ல திப்புசுல்தானோட வீழ்ச்சிக்கு அப்புறம் கிழக்கிந்தியகம்பெனியின் துனையோட மைசூர்மஹாராஜா'வோட ஆள்கைக்கு உடபட்டு இருந்ததுச்சுங்க. அப்புறம் மொத்தமாக ஆங்கிலேயர்களின் கட்டுபாட்டுக்கு வந்து 1804ல ஒரே மாவட்டமாக ஒரே மாவட்டஆட்சியரோட அதிகாரத்துக்கு வந்துச்சுங்க. பிற்ப்பாடு பல்வேறு ஆட்சி காரணங்களுக்காக, அது பல மாவட்டங்களா, தாலுக்காவா பிரிக்கப்பட்டது. இன்னைக்கு பல்வேறு தனிதனி அடையாளங்களோட இந்த ஊர்கள் இருந்தாலும், இன்னமும் அந்த

1:வணக்கம்ங்க..!

'நம்மூர்ல மழைங்களா?' எங்கயாவது ஒரு இடத்துல கொங்குநாட்டை சேர்ந்த ரெண்டு பேர் சந்திச்சுகிட்டாங்கன்னா கேட்டுக்கிற முத கேள்வியே இது தாங்க.. 'ஊர்ல மழையா?ங்கிற கேள்விக்குப்பொறவு தான் 'வூட்ல அம்மிணி/மச்சான் குழந்தைக எல்லாம் செளக்கியமா?ங்கிறது. அந்தளவுக்கு மழையயும் விவசாயத்தையும் பெரிய அளவுல நம்பி வாழற மக்கள் நிறைஞ்ச இடம்ங்க கொங்குதேசம். இப்போ எல்லாம் வாழ்க்கை முறைக கொஞ்சம் மாறிப்போயி, ஊரு உலகம் பூராவும் பறந்து வாழப்போயிட்ட மக்கள் கூட்டம் பெருகிபோனப்பவும், எங்கயாவது ஒரு நிமிசநேரம் மாடிப்படியில எதுக்கஎதுக்க பார்த்துக்கும் போதோ, 'மால்'ல வேடிக்கை பார்க்கும் போதோ, யாஹூ'விலயும் கூகிள்டாக்'லயும் ஒரு ஹாய் சொல்றப்பவும்கூட 'ஊருக்கு பேசுனயா? மழையாமா?'ன்னு சட்டுன்னு முத கேள்வியா வந்து விழுகற அந்த கேள்வி, கொங்குதேசத்துலயே தன்னோட வேரை இன்னும் விட்டு வச்சிருக்கிற ஆளுகள படம் புடிச்சு காட்டிரும்ங்க.. (அப்பா..! ஒரு வழியா தலைப்புக்கு பெயர்க்காரணம் சொல்லியாச்சு..!) மழை பேய்யறது, காத்தடிக்கிறது எல்லாஞ்சரி, இதென்ன புதுசா 'கொங்குவாசல்'? - இங்க பாருங்க, கேள்வி கேக்க