Skip to main content

நம்ம ஊரு சமையலேய்...

பச்சைப்பயிறு கடைஞ்சது


தேவையான பொருட்கள்
  • பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) - 200 கிராம்,
  • சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு,
  • தக்காளி - 1,
  • வர மொளகாய் - 5,
  • கொத்தமல்லி- 2 டீ ஸ்பூன்,
  • ஜீரகம் - 1 டீ ஸ்பூன்,
  • பூண்டு - 4 பல்,
  • கறிவேப்பிலை - சிறிது,
  • உப்பு - தேவையான அளவு,
  • கடலை எண்ணெய் - 1 ஸ்பூன்.

செய்முறை:

1) பச்சைப்பயிறை லேசாக வறுத்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
2) ஊறிய பயிறை குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, அஞ்சாறு விசில் விட்டு வேக வைக்கவும்.
3) வெந்த பயிறை மத்தால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
4) வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
5) கொத்தமல்லி, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து, பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.
6) வாணலியில் எண்ணெய் விட்டு, பொடித்த கொத்தமல்லி, சீரகம், நசுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
7) தக்காளி நன்கு கரைந்த பின், கறிவேப்பிலை,மசித்த பயிறு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
8) சூடான சாதத்தில் தேங்காய் எண்ணெய்/நெய் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

Comments

Anonymous said…
பச்சப்பயறு கடைஞ்சது சாப்புட்டு கொஞ்ச நாள் ஆச்சு. ஆசையக்கெளப்பி உட்டுட்டீங்க. வீக் என்ட் இதுதான் பண்ணறதுன்னு இப்பவே முடிவு பண்ணியாச்சுங்கோ....
G.Ragavan said…
பிரமாதம் போங்கோ. தேங்காண்ணை கொறைக்கனும். கொழுப்பு நெறைய. நல்லெண்ணெய் தேவலை. ஓரளவுக்கு நல்லது.
கொஞ்ச நாளா மகனர் குலங்கள் சமையல் குறிப்பை வீளாசித்தள்ளிக்கிட்டு
இருக்கறதைப் பார்த்தால்.................
டன்னலில் கடைசியில் 'ஜோதி' தெரிகிறது:-)))))

ஹூம்.......கொடுத்துவச்ச மகராசிகள்:-))))))))))
தமிழ் said…
படமும் வடிவமும் நன்றாக இருக்கிறது
arulselvan said…
>>>தேங்காண்ணை கொறைக்கனும். கொழுப்பு நெறைய.

தேங்காயெண்ணெய் சேக்காம கொங்கு நாட்டு சமையல் கிடையாது. ஏம்பா ldc/hdc பத்தியெல்லாம் நாப்பது வயசுக்கப்புரம் யோசிக்கலாம். இப்போதைக்கு அநுபவிங்க தம்பிகளா.
Kasi Arumugam said…
அட, மண் வாசனை!

எப்பிருந்து இந்தக் கத நடக்குதூ?
Sud Gopal said…
வாங்க சின்னம்மிணீ...
வாரக்கடைசியில பச்சப்பயறு கடைஞ்சது செஞ்சு சாப்பிட்டிட்டு அசத்தீடுங்கோ...
Sud Gopal said…
//G.Ragavan said...
பிரமாதம் போங்கோ. தேங்காண்ணை கொறைக்கனும். கொழுப்பு நெறைய. நல்லெண்ணெய் தேவலை. ஓரளவுக்கு நல்லது//

வாங்கய்யா ராகவனாரே...
நம்மூர்ல தேங்காண்ணையும்,கடலெண்ணையும் தான் முக்கா வாசி சமையலுக்கு.மலையாள தேசத்துக்குப் பக்கத்தால இருக்கிறதால இந்தத் தேங்காண்ணெய் உபயோகம் வந்திருக்கலாம்.
Sud Gopal said…
//துளசி கோபால் said...
கொஞ்ச நாளா மகனர் குலங்கள் சமையல் குறிப்பை வீளாசித்தள்ளிக்கிட்டு
இருக்கறதைப் பார்த்தால்.................
டன்னலில் கடைசியில் 'ஜோதி' தெரிகிறது:-)))))..ஹூம்.......கொடுத்துவச்ச மகராசிகள்:-))))))))))//

அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லீங் டீச்சர்.டன்னலில தெரியற ஜோதி எதுக்கால வார சேரன் எக்ஸ்பிரசோட ஹெட் லைட்டாக் கூட இருக்கலாமுங்கோ...:-)))
Sud Gopal said…
பாராட்டுக்கு நன்றிகள் திகிழ்மிளிர்.(இந்தப் பெயருக்கு அர்த்தம் என்னவோ???)
Sud Gopal said…
//அருள் செல்வன் கந்தசுவாமி said...
>>>தேங்காண்ணை கொறைக்கனும். கொழுப்பு நெறைய.

தேங்காயெண்ணெய் சேக்காம கொங்கு நாட்டு சமையல் கிடையாது. ஏம்பா ldc/hdc பத்தியெல்லாம் நாப்பது வயசுக்கப்புரம் யோசிக்கலாம். இப்போதைக்கு அநுபவிங்க தம்பிகளா. //

அண்ணன் சொன்னா அது சரியாத்தான் இருக்கும்னேன்...
Sud Gopal said…
//Kasi Arumugam said...
அட, மண் வாசனை!
எப்பிருந்து இந்தக் கத நடக்குதூ?//

வாங்க..வாங்க..பொங்கல்ல ஆரம்பிச்சதுங்...
Anonymous said…
Its been more than 2 years since i had Pachapairu.. Its very yummy with pavakkai or vendaikkai porial.. I miss it.
அட ட்ரிக்கு வறுத்து ஊற வெக்கறதுல இருக்கா?

வறுக்காம குக்கர்ல வெச்சா கொசகொசன்னு வருது.

வறுத்து குக்கர்ல வச்சா வேகுவனாங்குது.

ஆன்சைட்ல இருக்கும்போது பச்சபயறு சமைக்க ஆசப்பட்டு மண்டை காஞ்சதுதான் மிச்சம்.

இப்ப ஊருக்கு போகும்போதெல்லாம் பச்சப்பயறு கண்டிப்பா மென்யுவில இருக்கும்.

இன்னொன்னு, பச்சபயறு, கொள்ளுப்பயறு, தட்டைபயறு இதெல்லாம் விரும்பி சாப்பிடறவங்களோட செல்லப் பேரு என்ன தெரியுமா?
Sud Gopal said…
அனானி:
//Its very yummy with pavakkai or vendaikkai porial.. I miss it//
சேம் பிளட்...

பெத்தராயுடு:
//அட ட்ரிக்கு வறுத்து ஊற வெக்கறதுல இருக்கா?//

அதே..அதே..சபாபதே....

//பச்சபயறு, கொள்ளுப்பயறு, தட்டைபயறு இதெல்லாம் விரும்பி சாப்பிடறவங்களோட செல்லப் பேரு என்ன தெரியுமா?//

தெரியலையே..???
பச்சப்பயறு கடஞ்சு செஞ்சு பாத்திடவேண்டியதுதான். ரங்கமணிகள்
எல்லோரும் இப்படி பொங்குற மணிகள் ஆய்டா...நாங்களெல்லாம்
ஹாலில் வொக்காந்து பேப்பர் படிக்கலாமுங்களா? 'சூடா ஒரு கப் காபி...!' அப்டீன்னு? ரொம்ப நாள் ஆசை...ஹி..ஹி..
//பச்சபயறு, கொள்ளுப்பயறு, தட்டைபயறு இதெல்லாம் விரும்பி சாப்பிடறவங்களோட செல்லப் பேரு என்ன தெரியுமா?//

இவஞ் செரியான 'பருப்பு முத்தண்ணனா' இருக்கறான் அப்படிம்பாங்க.
சமையல் குறிப்பு தட்டப்பயிறுக்கும் பொருந்தும்.நானும் பத்து இருபது வருசமா தட்டப்பயிறு தேடு தேடுன்னு தேடறேன்.கண்ணுல படவே மாட்டேங்குது.

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)