Skip to main content

கொங்கு மண்டல செய்திகள் - நவ. 2, 2007

இன்று செய்திகள் அதிகமில்லை!
  1. பொள்ளாச்சியில் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் - சேலம் கோட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளை சேர்க்காததை எதிர்த்து. (சேர்த்திருந்தால், கோட்டத்துக்கு கோவை (அ) பொள்ளாச்சியைத் தலைமையிடமாக அறிவிக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்திருப்பார்களோ?)
  2. கோவை மாநராட்சி கலையரங்கத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வேண்டும் : மேயர் வெங்கடாசலம் (இடத்துக்கும் ஊருக்கும் ஆள் பெயர் வைப்பதெல்லாம் ஒரு சுற்று போய் அடங்கியிருக்கிறது. பழையபடி அதைத் தொடங்கி வைக்கணுமா? ஒரு கலையரங்கத்துப் பெயருக்குள்ள திருவள்ளுவர் பெருமை அடங்காது)
  3. ரயில்வே லாபத்துக்கு காரணம் லாலு அல்ல; வேலுதான்: சேலத்தில் மருத்துவர் ராமதாஸ் (தினமலர் இதைச் சொல்வதால் கொஞ்சம் காரண காரியங்களை ஆராய்வேண்டியுள்ளது)

Comments

நானும் தினமலர்லே இந்தச் செய்தி பார்த்தேன்.
பொள்ளாச்சியை மீட்க வைகோ உண்ணாவிரதமுன்னு.

யார்கிட்டெ அடமானம் வச்சுருக்காங்க பொள்ளாச்சியைன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தெனுங்க.

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்...

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)

கவைய காளியம்மன் கோவில்