Skip to main content

உன் குற்றமா.. என் குற்றமா..?


விறுவிறுவென குளிர்க் காற்று வீசிக் கொண்டிருந்தது. மலைமுகடுகளின் விளிம்புகள் எங்கும் கருமேகங்கள் குழாம் இட்டிருந்தன. மலையின் பின்புறம் மழை பெய்து கொண்டிருந்ததால், காற்றில் ஈரம் மிகுந்திருந்தது.

கோவை நகரின் இரைச்சலில் இருந்து விலகி நீலக் கார், ஊட்டி சாலையில் போய்க் கொண்டிருந்தது. லேசாகத் திறந்திருந்த ஜன்னலின் இடுக்குகள் வழியே பேரார்வத்துடன் குளிர் புகுந்து கொண்டிருந்தது.

"அருண்..! ஏஸியைக் கொஞ்சம் குறைச்சு வையுங்களேன். ஆஃப் பண்ணிட்டா பெட்டர்.." கழுத்து வரை ஸ்வெட்டரை இழுத்து விட்டுக் கொண்டு சொன்னாள் ரம்யா.

ரம்யா. இருபத்து மூன்று வயது மட்டுமே நிரம்பிய இளமை ஆப்பிள். வெடவெடக்கும் குளிரோடு, படபடக்கும் கண்களோடு, காண்பவர் உள்ளத்தை படபடக்கச் செய்யும், ஜில்ஜில் ஜிகர்தண்டா. இளங்கலை முடித்து விட்டு, முதுகலை வகுப்பில் சேரப் போனவளை, கல்லூரி முதல்வரே, 'நீயா.. முதுகலைக்கா.. ஸாரி.. குழந்தைகளை எல்லாம் முதுகலையில் சேர்ப்பதில்லை.." என்று சொல்லி விட்டதாகக் கேள்வி. அப்படியொரு குழந்தைத் தனமான முகம்.

ஸியை அணைத்து விட்டு, இன்னும் வேகத்தைக் கூட்டினான் அருண்.

"கொஞ்சம் ஸ்லோவாப் போங்க, அருண்.." என்றாள் ரம்யா.

"என்ன ரம்யா.. இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு மேரேஜ் ஆகப் போகுது. இன்னும் என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கறியே.. இந்த வேகம் எல்லாம் ரொம்ப கம்மி.. பைபாஸ்ல நான் போய் நீ பார்த்ததில்லையே.." என்றான் அருண்.

"ம்ம்ம்... எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான். அப்புறம் பாருங்க..." என்றாள் குறும்புச் சிரிப்போடு. அந்தச் சிரிப்பில் அருணும் கலந்து கொண்டான்.

"இருந்தாலும் நீங்க பண்றது சரியாப் படலை எனக்கு... க்ளைமேட் சரியில்லைனு அப்பா அவ்ளோ சொல்லியும், குன்னூர்ல இருக்கற உங்க கெஸ்ட் ஹவுஸ்க்கு அவசியம் இன்னிக்கு போகணுமா..?"

"என்ன ரம்யா.. இன்னும் சின்னக் குழந்தையாட்டமே பேசற.. கல்யணத்துக்கு முன்னாடி இருக்கற இந்த கேப்பில உன்கூட ஊர் சுத்தற த்ரில் இருக்கே... அதுக்காக தான் இப்படி.. ஏன், உனக்குப் பிடிக்கலையா..?"

"பிடிக்கலைனு இல்ல.. இருந்தாலும்..."

"மூச்... இனி இதைப் பத்தி பேசக் கூடாது.." குறும்பாக மிரட்டினான் அருண்.

"ஓ.கே.ஸார்.." பொய்ப் பயத்துடன் வாய் மேல் கை வைத்துக் கொண்டாள் ரம்யா.

சாலையின் வெறிச்சோடிய அமைதியை அவ்வப்போது கடந்த பேருந்துகள் கிழித்துச் சென்றன. பொட்டு, பொட்டாகத் தூறல் விழத் தொடங்கியது. வைப்பர்கள் விளையாட ஆரம்பித்தன.

"அருண்.. உள்ள ஒரே சைலண்டா இருக்கு. ஜன்னல் எல்லாம் வேற க்ளோஸ் பண்ணிட்டீங்க. ஏதாவது பாட்டு பாடுங்களேன்..."

"நான் பாடிடுவேன். ஆனா அப்புறம் நீதான் ரொம்ப கஷ்டப்படுவே. அவ்ளோ கர்ணகடூரமா இருக்கும்... கேளேன்...ஆ..ஆ..ஆ..."

"கவலையே படாதீங்க. மலையேறதால காது ரெண்டும் அடைக்க ஆரம்பிக்குது. அதை மறுபடியும் ஓபன் பண்ணத் தான் உங்களை பாடச் சொன்னேன். காதுகிட்ட வந்து யாராவது கத்தினா, காது அடைப்பு எல்லாம் சரியாயிடும் தான..." என்று சிரித்தாள் ரம்யா.

"அடிப் பாவி... சரி, நீ பாடு, கேட்கலாம்... எனக்கும் காது அடைக்கற மாதிரி இருக்கு.." என்றான் அருண்.

"ஐ... ஆசை தான். நான் பாட மாட்டேன். ஏதாவது கேசட் போடுங்க.. அதையாவது கேட்போம்.." என்றாள் ரம்யா.

டேஷ் போர்டைத் திறந்து தேடினான். கையில் கிடைத்த ஒரு கேஸட்டைப் ப்ளேயரில் கொடுத்து ஓடச் செய்தான்.

காதல் குரலில் எஸ்.பி.பி. பாடத் தொடங்கினார்.


Get Your Own Music Player at Music Plugin

ரம்யாவிற்குத் தூக்கிவாரிப்போட்டது. தலை சுற்றுவது போல் இருந்தது. அருணைப் பார்த்தாள். அவனது முகம் சற்றே இறுகிப் போகத் தொடங்கியது.

'சடாரென' காரை நிறுத்தினான். கார் கட்டுப்பாடு இல்லாமல், சுற்றியது. பின், அமைதியாகி நடுரோட்டில் நின்றது. ரம்யா அதிர்ந்து போனாள். அருணை ஏறிட்டாள்.

அருண் அமைதியாக ரம்யாவைப் பார்த்தான்.

"அருண்.. அருண்.. என்ன ஆச்சு உங்களுக்கு..?" அருண் தோளைப் பிடித்தாள்.

அமைதியாக, மிக அமைதியாக அவளைப் பார்த்த அருண்,"என்னை யார்னு தெரியலயா உனக்கு..?" என்று கேட்டான்.

வானம் வேகமாகக் கருத்துக் கொண்டிருந்தது. இருட்டான சவுக்குத் தோப்புகளின் மரங்கள் பேயாட்டம் ஆடின. மழை பெரிதாகப் பெய்யத் தொடங்கியது. வைப்பர்கள் வேகமாக இயங்கின. காரின் ஹெட்லைட்டின் கீற்றுகள் மழைக் கற்றைகளில் நனைந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் அரவமே இல்லை.

"அருண், என்ன பண்றீங்க..? விளையாடாதீங்க. எனக்குப் பயமாயிருக்கு..." என்று லேசாக கண்ணீர் விடத் தொடங்கினாள் ரம்யா.

வேகமாகப் பாய்ந்து, அவளின் தோள்களைப் பிடித்து, ரம்யாவின் கண்களையே பார்த்துக் கேட்டான் அருண்," நெஜமாவே என்னை யார்னு உனக்குத் தெரியலயா..? இந்தப் பாட்டைக் கேட்டும் ஞாபகம் வரலையா உனக்கு..?" என்று ப்ளேயரைப் பார்த்தான்.

கண்களில் குற்ற உணர்வு பாய, குரல் நடுங்கியவாறே, ரம்யா கூறினாள்,"ச..ந்...தோ...ஷ்..".

"ம்யா.. இங்க பாரேன்.."

"சந்தோஷ்.. எனக்கு பயமாயிருக்கு..?"

"என்ன பயம்..?"

"இப்படி.. தேர்ட் செமஸ்டர் ஃபைனல்க்கு படிக்கப் போறேன்ட்டு, மருதமலை படிக்கட்டுல உட்கார்ந்துட்டு இருக்கேன். பயமாயிருக்காதா..?"

"ரம்யா.. நீ என்ன சின்னக் குழந்தையா... அவனவன் லவ்வரைக் கூட்டிக்கிட்டு எங்கெல்லாமோ போறான். நான் உன்ன கோயிலுக்கு தான கூட்டிட்டு வந்திருக்கேன். முருகா, நீ தான் இவளை மாத்தணும்.."

"ஆமா, முருகனுக்கு இது தான் வேலை..கிட்ட வராதீங்க.. இதெல்லாம் அப்புறம் தான்.. அப்பு..."

"...."

"ஹேய்.. ரம்யா.. என்ன கெளம்பிட்டே.."

"நான் கிளம்பறேன்.. லேட்டாயிடுச்சு... வீட்டுல தேடுவாங்க... அப்புறம், இது கோயில். விட்டா அதை மறந்திடுவீங்க.."

"இரு., நானும் வரேன்.."

"ம்யா., காந்திபுரம் வர்றவரைக்கும் என்ன பண்றது..?"

"ம்ம்... எத்தனை லேம்ப்போஸ்டை க்ராஸ் பண்றோம்னு கணக்கு எடுக்கலாம். மருதமலைல எத்தனை மயில் பார்த்தோம்னு யோசிக்கலாம். போன வாரம் கீதாஞ்சலில படம் பார்க்கும் போது, எத்தனை தடவை நான் 'சும்மா இருங்க'னு சொன்னேனு யோசிக்கலாம். அதெல்லாம் விட.."

"விட..."

"'முருகா.. ரம்யாவும் நானும் எந்த பிரச்னையும் இல்லாம ஒண்ணு சேரணும்'னு வேண்டிக்கிட்டே வரலாம்.."

"ரம்யா.."

"ச்சீ.. என்ன இது பஸ்ல கண் கலங்கிட்டு..."

"ம்யாக் கண்ணு..! எங்கம்மா போய்ட்டு வர்ற..?"

"சுகன்யா வீட்டுக்குப்பா. எக்ஸாம்க்கு படிச்சிட்டு வர.."

"சாய்பாபா காலனி சுகன்யா வீட்டுக்கா..?"

"ஆமாப்பா.."

"அவங்க வீடு, காலனியில தான. மருதமலையில இல்லையே..?"

"அப்பா...."

"நம்ம பார்ட்னர் வீட்டுக்குப் போய்ட்டு வரும்போது, உன்னைக் கூட்டிட்டு வரலாம்னு அங்க போய்ட்டு தான் வந்தேன். நீ அங்க இல்லையேம்மா. அவளைக் கேட்டப்போ அவ எல்லாம் சொல்லிட்டா.."

"..."

"உன்னை எந்தளவு வளர்க்கணும்னு நெனச்சிருக்கேன் தெரியுமா? நீ இப்படி பண்ணலாமா..? இந்தப் பழக்கம் எல்லாம் வேணாம்மா. அப்பா சொல்றதக் கேளு..."

"அப்பா.. சந்தோஷ் ரொம்ப நல்லவர்பா.."

"எதுவும் பேசாத. இந்த டிகிரி முடிச்சதும் உனக்குக் கல்யாணம். மாப்பிள்ளை நம்ம பார்ட்னர் மகன் அருண் தான். லண்டன்ல மாஸ்டர் பண்ணிட்டு இருக்கான். அடுத்த வருஷம் படிப்பு முடிச்சிட்டு, நம்ம ஃபாக்டரில டைரக்டரா ஜாய்ன் பண்ணப் போறான். நாங்க முடிவு பண்ணிட்டோம். உனக்கு அவனை கல்யாணம் பண்ணி வைக்கிறதா. இந்த ஒன்றரை வருஷம் ஒழுங்கா படிச்சிட்டு வந்தயினா, உன்னை காலேஜுக்கு அனுப்பறேன். இல்லைனா, இன்னிலிருந்து நீ வீட்டுலயே இருக்கணும்.என்ன சொல்ற..?"

"இல்லப்பா.. நான் காலேஜுக்குப் போறேன்.."

'அப்பா.. சாரிப்பா. நீங்க என்ன நெனச்சாலும் எங்க காதலைப் பிரிக்க முடியாது.."

'ரம்யா.. நான் உன் அப்பாடா.. நீ என்ன நெனைக்கிறேன்னு எனக்குத் தெரியாதா.. அந்தப் பய கதையை முடிச்சிடறேன்.. அப்ப தான் நீ என் வழிக்கு வருவே..'

"ம்யா.. ரம்யா.."

"என்ன சுகன்யா.. ஏன் இவ்ளோ அவசரமா ஓடி வரே.."

"ரம்யா.. சந்தோஷ் கே.எம்.சி.ஹெச்.கிட்ட வரும்போது, கார் மோதி பெரிய ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு. கே.எம்.சி.ஹெச்.க்கு தான் எடுத்திக்கிட்டு போயிருக்காங்க.. நீ உடனே போய்ப்பாரு... உன் பேரைச் சொல்லித் தான் முனகிட்டு இருக்கான்.."

"சந்தோஷ்..."

'வா பொன்மயிலே' என்று எங்கேயோ பாடிக் கொண்டிருந்த ஓசை கேட்டுக் கொண்டிருந்தது.

"சந்தோஷ்.. நான் தான் உங்க ரம்யா வந்திருக்கேன்.. கண்ணைத் திறந்து பாருங்க சந்தோஷ்.."

"ரம்யா.. வந்திட்டியா.. உன்ன பார்க்காம போய்டுவேனோனு பயந்துட்டு இருந்தேன்.."

"அப்படி எல்லாம் பேசாதீங்க சந்தோஷ்.. உங்களுக்கு ஒண்ணும் இல்ல.. நீங்க நல்லபடியா வந்திடுவீங்க பாருங்க.."

"பொய் சொல்ற... பொய்... பொ..."

"சந்தோஷ்..."

'திடுக்'கென தலையை உலுக்கிக் கொண்டாள் ரம்யா. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நடந்தது, நேற்று நடந்தது போல் இருக்கிறது. சுற்றுமுற்றும் பார்த்தாள். இன்னும் பெரிதாக மழை பெய்து கொண்டிருந்தது. அருண் ஸ்டீயரிங் மீதே தலை வைத்து மயங்கியிருந்தான்.

ரம்யா அவசரமாக செல்போனை எடுத்தாள்.

"அப்பா. ரம்யா பேசறேன். இங்க குன்னூர் மெயின் ரோட்டில, அருண் திடீர்னு மயங்கிட்டார். ஆமாப்பா.. அஞ்சாவது பெண்ட்.."

"த்திங் டு ஒர்ரி, மிஸ்டர் ராஜகோபால். உங்க வருங்கால மாப்பிள்ளைக்கு கொஞ்சம் மூளைல சின்னப் பிராப்ளம். ஏதோ ஒரு நிகழ்ச்சி அவர் மனதை ரொம்ப பாதிச்சிருக்கு. அந்த நிகழ்ச்சிக்கும் நீங்க சொல்ற பாட்டுக்கும் ஏதோ நெருக்கமான தொடர்பு இருக்கணும். நோ பிராப்ளம். அதை ஈஸியாக் கண்டுபிடிச்சு சால்வ் பண்ணிடலாம். நீங்களும், உங்க பொண்ணும் நாளைக்கு வாங்க. அவர் வாயாலயே அந்த நிகழ்ச்சி என்னனு கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்." என்றார் மனவியல் மருத்துவர் ரத்னம்.

"டாக்டர். என் பொண்ணும் கண்டிப்பா வரணுமா?" என்று கேட்டார் ராஜகோபால்.

"அஃப் கோர்ஸ். நாளைக்கு ஒண்ணா சேர்ந்து வாழப் போறவங்க. கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்." என்றார் டாக்டர்.

டாக்டர் ரத்னம் சில சிகிச்சைகளைக் கொடுத்து, கேள்விகளைக் கேட்டு முடித்தவுடன், அருண் பேசத் தொடங்கினான், மயக்க நிலையிலேயே.

"ன்றரை வருஷத்துக்கு முன்னாடி, ஒரு வெகேஷனுக்கு நான் ஊருக்கு வந்திருந்தேன். அப்ப ஒருநாள், காரை வேகமா ஓட்டிக்கிட்டு வரும் போது, கே.எம்.ஸி.ஹெச்.க்குப் பக்கத்தில ஒரு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு. ஒருத்தன் மேல மோதிட்டேன். ஸ்பாட் டெத் ஆகியிருக்க வேண்டியவன். ஆனா அவனைத் தூக்கிட்டு போய், கே.எம்.ஸி.ஹெச்லயே சேர்த்துட்டேன். இருந்தாலும் போலிஸ், கேஸ்க்குப் பயந்திட்டு காருக்குள்ள போய் உட்கார்ந்துக்கிட்டேன். அவனோட சொந்தக்காரங்க யாராவது வந்தாங்கன்னா அவங்க கையில, கால்ல விழுந்தாவது நான் தப்பிச்சுக்கணும்னும், அவங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் கொடுத்துடலாம்னு அங்கயே இருந்தேன். அப்ப என் டென்ஷன் குறைவதற்கு எனக்குப் பிடித்த பாடலான இந்தப் பாடலைக் கேட்டுக்கிட்டு இருந்தேன். அப்புறம் எனக்குப் பயம் வந்திடுச்சு. ஸோ, ஸீன்லயே இருக்கக் கூடாதுனு காரை ஓட்டிட்டு வந்திட்டேன். அப்புறம் அந்த ஆள் செத்துட்டான்னு தெரிய வந்துச்சு. அதுக்கப்புறம் இந்தப் பாட்டை எப்பக் கேட்டாலும், அந்த ஆளோட ஆவி என்னை கேள்வி கேக்கற மாதிரியே தோண ஆரம்பிச்சுது. கொஞ்ச நாள்ல, அந்த ஆவி, எனக்குள்ளயே புகுந்துட்ட மாதிரியே ஆகிட்டது.

அன்னியில இருந்து இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் நான் நானா இருக்கறது இல்ல. அந்தா ஆவி தான் என்னை இயக்குது. அந்த ஆளாகவே மாறிடுறேன்.. என்னைக் காப்பாத்துங்க டாக்டர்.." என்று கூறி, அழுதான் அருண்.

'தடார்' என்று மயங்கி விழுந்தாள், ரம்யா.

Comments

வணக்கம்
உங்கள் கட்டுரைகளும் ஆக்கங்களும் என்னை உங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.
வாழ்த்துக்கள்

முதலில் என்னை பற்றிய ஒர் சிறிய அறிமுகம்.

எனது பெயர் இரமணன் நான் ஒரு இணைய தள வடிவமைப்பாளராக பணி புரிகிறேன். உயிர் வாழ்வதற்க்காக சொந்த மண்ணை விட்டு அந்நிய மண்ணிலே செத்துக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான கோழைகளில் நானும் ஒருவன்.

நான் தற்பொழுது ஓர் சிறிய முயற்ச்சியில் இறங்கியுள்ளேன். அதை உங்களிடம் பகிர்து கொள்ள விரும்ப்புகிறேன்.

இன்று இணையதில் நிறைய தமிழ் சார்ந்த விடயங்கள் இருக்கின்றன இது தமிழ் வளர்ச்சியில் மிகவும் வரவேற்க்க தக்கது ஆனால் இதில் வருந்த தக்க விடயம் என்ன வென்றால் இந்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் போய் சேராதது தான். இதற்க்காகவே நான் ஓர் இணைய தளத்தை ஆரம்பித்து உள்ளேன். இதில் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழ் சார்ந்த தகவல்களையும் திரட்டி ஓர் இடத்தில் பதித்து வருகிறேன். இதில் உங்கள் கட்டுரைகளையும் ஆக்கங்களையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அதற்க்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தகவல்கள் அனைதும் உங்கள் பெயரிலேயே பதியப்படும்.

தமிழ் அமுதினைத் திரட்டிவரும் இந்த தேனிக்கு தங்கள் உதவியை வழங்குங்கள். நாளைய எமது தமிழ் சமுதாயம் இணையத்தில் நடை போட இது வழி சமைக்கும் என்று நம்புகிறேன்

நன்றி
இரமணன்
www.thurikai.com
கதை முழுவதும் கொங்கு மணம் அதாவது ராஜேஷ் குமார் வாசனை....

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)