Skip to main content

Posts

Showing posts from October, 2007

இன்றைய செய்திகள்: - அக் 31, 2007

கோவையிலிருந்து சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் நேரடி விமான சேவை தொடக்கம். விமான நிலையம் இனி 24 மணி நேரமும் செயல்படும் ஒன்றாக இருக்கும் உதகை மலை ரயில் நிலச்சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது பருவமழையால் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. கோவை-தெற்கு(TN-37), கோவை-வடக்கு(TN-38) இவற்றோடு கோவை-மத்தி என்ற புதிய வட்டாரப் போக்குவரத்து அலவலகம் துவக்கப்படுகிறது. சற்றுமுன்: மேட்டுப்பாளையம்-உதகை நெடுஞ்சாலையில் பழுது ஏற்பட்டதால் போக்குவரத்து கோத்தகிரி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில ச்சூ ச்சூன்னு விளிக்கண்டா

கி்ராஸ்கட் ரோடில் ஸ்டேஷனரிக் கடையில் புத்தகம் (இவர் புத்தக்கக்கடைக்கெல்லாம் போக ஆரம்பிச்சார்னு் யாரும் ஆச்சரியப்படவேண்டியதில்லை, இது த.நா.பா.நூ.நி. வெளியீடு;-) வாங்கிக்கொண்டிருக்கும்போது, ஒரு சேட்டன் 'ச்சூ ச்சூ' என்று கடைக்காரரை அழைக்க, அவர் சொன்னது இது. பாலக்காட்டுப் பக்கத்துல ஒருவர் கவனத்தைக் கவர இப்படி ஓசையிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு மணிநேரப்பயணத்தில் போகக்கூடிய இடத்தில் இப்படியொரு அதிர்ச்சியை அந்தக் கேரளத்து நண்பரும் எதிர்பார்த்திருக்கமாட்டார். 'சாரி, சாரி' என்று ஏற்கனவே இதை அறிந்தும் மறந்தவர் போல அசடு வழிந்தார். 'கேரளாவுக்குள்ள போய் யாரை வழிகேட்டாலும் உதட்டைப் பிதுக்கி தோளை உயர்த்திக் காட்டி எரிச்சலூட்டுவார்கள்' என்று ஒரு பொது அபிப்ராயம் உண்டு. சிலசமயம் நேரிலேயே அனுபவப் பட்டிருந்தாலும் வலைப்பதிவெல்லாம் வாசிக்க ஆரம்பித்தபின் பொலிடிகலி கரெக்னெஸ் புத்தி அவ்வப்போது பொதுப்புத்தியைக் கேள்வி கேட்டாலும்... ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் ஒரு பொதுவான அணுகுமுறை, வெளிப்பாடு இருக்கும்தானே. நம்மைப்பத்தி கேரளாவுக்குள்ள என்னென்ன மாதிரி பொது அபிப்ராயம் இருக்குன்னு தெரிஞ

எக்சிபிசன்ல வாங்குனதா?

சென்ரல் பஸ்டாண்டு எதுக்கால ஜெயில் காம்பவுண்டுக்குள்ள 'அரசுப் பொருட்காட்சி' வருசா வருசம் நடக்கும். அப்ப சினிமாவை விட்டா குடும்பத்தோட வெளிய போக நெறய இடம் கிடையாதா, பொருட்காட்சி எப்ப தொடங்கும்னு காத்துட்டிருந்தவங்ககூட உண்டு. சிலருக்கு தூரி/மேஜிக் மாதிரி சமாசாரங்க, சிலருக்கு மொளகா பஜ்ஜி/டெல்லி அப்பளம், சிலருக்கு சிடிசி ஸ்டால் வாசலில் ரிமோட்டில் ஒடும் பஸ், சிலருக்கு ஒரே இடத்தில் கலர்கலரா ஃபிகர்கள், சிலருக்கு முறுக்கு சுடுறது, வெங்காயம் உரிக்கிறதுன்னு புது சாமானுங்க, சிலருக்கு மெடிக்கல் காலேஜ் ஸ்டாலில் கிடக்கும் பிணம், ... இப்படி ஒவ்வொருத்தருக்கும் எதோ ஒண்ணு அங்க இருந்துச்சு. இப்பவும் ந்டக்குது, ஆனா அத்தனை கூட்டத்தைக் காணோம். பிறகு மக்கள் போனஸ் வாங்கும் சமயம் கையில காசு புரள்றதைத் தெரிஞ்ச சில சுறுசுறுப்பானவங்க 'வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சி' அப்படிங்கற மாதிரி ஒண்ணை வ.உ.சி. பார்க் மைதானத்தில் நடத்த ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் பசையுள்ள பார்ட்டிகள் மட்டுமே வருவதாலோ என்னமோ கூட்டம் கம்மியா இருக்கும். புதுசு புதுசா மார்க்கெட்ல என்ன பொருள் வந்துருக்குதுங்கறதத் தெரிஞ்சுக்க மக்களுக்க