Skip to main content

Posts

Showing posts from July, 2007

இவிங்களத் தெரியுமுங்களா...?

இவிங்களத் தெரியுமுங்களா...? தெரிஞ்சதுன்னா அட்ரச சொல்லிப்போட்டு போங்க... ஏதோ பேமசான டயலாக்கெல்லாம் சொல்லீருக்காக போல! கேட்டுத் தெரிஞ்சுக்கலாமுன்னுதேன்... 1. காரமடை ரங்கநாதன் 2. அம்சவேணி பழனிச்சாமி 3. குஞ்சு கவுண்டர் 4. தவசி 5. நாகராஜசோழன் M.A. 6. கோபால், LIC ஆபீசர் 7. பன்னிக்குட்டி ராமசாமி 8. பழனி சக்திவேலு 9. கமலி 10. கோவாலு 11. பாக்கியலச்சுமி 12. ஒத்த மீசை குப்புசாமி 13. வைத்தீஸ்வரி 14. செம்புலி 15. நீலவேணி 16. ராசப்பா 17. பயில்வான் பாலகுரு, வலையபாளையம் 18. காளிங்ஸ் 19. வெங்குடான் 20. குண்டலகேசி

கொங்கு வட்டார வழக்கு - ‍மூன்றாம் பாகம்

சொற்கள் ஊற்றினை போல சுரந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசிப்பதற்கான நேரமும் மனநிலையும்தான் வருவதில்லை. பின்னூட்டங்கள் வாயிலாகவும், தனி மின்னஞ்சல் மூலமாகவும் இப்பதிவினை குறிப்பிடும் நண்பர்களின் பங்களிப்பு தொடர்ந்து உற்சாகமூட்டுவதாக இருக்கின்றது. இந்தச் சொற்களில் பெரும்பாலானவை என் ஆயாவிடமிருந்து நான் கற்றுக் கொண்டவை. நான் பார்த்த, பார்க்கப் போகும் மனிதர்களுல், ஆயாதான் இந்தச் சொற்களை இறுதியாக பயன்படுத்தியவரோ என்ற பதட்டமும் ஒட்டிக் கொள்கிறது. கிழவி தன்னோடு சேர்த்து புதைத்துக் கொண்டதோ என்ற சந்தேகமும் வருகிறது.இன்னமும் என் மண்ணில் புழங்கிக் கொண்டுதான் இருக்கும் என்றாலும், எனக்கு இவற்றோடான அறிமுகம் அருகிக் கொண்டே வருவதும் இப்படி எண்ணக் காரணமாக இருக்கலாம். 1. வங்கு - பொந்து, சந்து 2. கம்மனாட்டி - முட்டாள், மடையன் 3. உருமாளை - தலைப்பாகை 4. சிம்மாடு - தலைப்பாகை.தலைப்பாகையில் இருந்து சற்று வேறுபட்டது. ஏதேனும் பொருளை தலையில் சுமக்கும் போது நழுவி விடாமல் இருப்பதற்காக துணியைச் சுற்றி வைப்பது. 5. கருப்பு - கருமாதி(ஈமச்சடங்கு) 6. அவுசாரி - விபச்சாரி 7. கட்டுக்கொலை - தன் சாதியைச் சார்ந்த நிகழ்வுகளில் பங்

கொங்கு வட்டார வழக்கு‍- இரண்டாம் பாகம்

1.மோனக்காரர் - விவசாயத்தொழிலுக்கு கூலி ஆட்களை அழைத்து வருபவர். கிட்டத்தட்ட மேஸ்திரி போல். 2. பண்ணையத்தாளு - ஒரு வருடத்திற்கு இவ்வளவு பணம் என்று பேசி முடிவு செய்திருப்பார்கள். அந்த ஆள் அந்த வருடம் முழுவதும் அந்த விவசாயியிடம் பணியாற்ற வேண்டும். எனக்குத் தெரிந்தே பத்து வருடங்களுக்கு முன்பு வரை கூட ஒரு விவசாயியிடம் ஒரு ஆள் தன் வாழ்வின் கடைசிக் கட்டம் வரை இருப்பார். இப்பொழுது இது மிக அரிதாகிக் கொண்டிருக்கிறது. 3. முறைமைக்காரன் - முறைக்கு சொந்தக் காரன். உதாரணமாக், மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜையின் போது கிடாவெட்டும் உரிமை ஒருவருக்கு கொடுக்கப்பட்டால் அவர் அந்த நிகழ்வின் முறைமைக்காரர். 4. தண்ணிவாக்கி - வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுபவர். வயல்களின் உரிமையாளர்கள் கூடி, நீர் பாய்ச்சவென ஒருவரை நியமித்திருப்பர். அவர்தான் சரிசமமாக, கவனமாக தண்ணீர் பாய்ச்சுவார். ஒவ்வொரு போகமும் முடிந்த பின் குறிப்பிட்ட பொதி நெல் வாங்கிக் கொள்வார். 5. பொதி - மூன்று அல்லது நான்கு மூட்டை நெல் ஒரு பொதி எனப்படும். 6. கருக்காய் - குறையுள்ள நெல்மணிகள். 7. கொறத்திக் குஞ்சு - இளம் தவளை. (தலைப்பிரட்டை) நீர் நிலைகளில் கிட்டத்த

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்

Kongu Cusine in chennai

வடநாட்டு ரொட்டிகளும் பன்னீரும் குண்டூர் காரக்குழம்பும் குண்டு மிளகாயும் செட்டிநாடு மசாலாக்களும் ஊர்ல அங்க அங்கே கடைதிறந்து திரும்பினபக்கமெல்லாம் கிடந்தாலும், வறுத்த நிலக்கடலைய அரைச்சு விட்ட கொழம்பும், பயிறு வகையரா ஒவ்வொன்னையும் ஒவ்வொரு விதமாவும், எண்ணையும் காராமும் அளவா விட்டு சமைக்கிற கொங்கு சமையலுக்குன்னு ஒரு கடையில்லையேன்னு நாக்கை கடிச்சுகிட்டு சங்கடப்படுற சென்னை வாழ் கொங்கு மக்களுக்கு ஒரு நல்ல சேதி :) நம்முர் சமையலுக்குனு விசேசமா ஒரு கடை சென்னையிலயே வந்தாச்சுங்க.. நம்மூரு கிருஷ்னா ஸ்வீட் காரங்க தான் இதையும் திறந்திருக்காங்க.. கடை பேரு என்னன்னு சொல்லுங்க பார்ப்போம் .. 'ரசம்'.. கேக்கும் போதே லேசா பசியெடுக்கிற மாதிரி இல்ல.. மேலும் விவரங்களுக்கு

நம்ம ஊரு சமையலேய்...

பச்சைப்பயிறு கடைஞ்சது தேவையான பொருட்கள் பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) - 200 கிராம், சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு, தக்காளி - 1, வர மொளகாய் - 5, கொத்தமல்லி- 2 டீ ஸ்பூன், ஜீரகம் - 1 டீ ஸ்பூன், பூண்டு - 4 பல், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு, கடலை எண்ணெய் - 1 ஸ்பூன். செய்முறை: 1) பச்சைப்பயிறை லேசாக வறுத்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். 2) ஊறிய பயிறை குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, அஞ்சாறு விசில் விட்டு வேக வைக்கவும். 3) வெந்த பயிறை மத்தால் நன்கு மசித்துக் கொள்ளவும். 4) வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். 5) கொத்தமல்லி, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து, பூண்டை நசுக்கிக் கொள்ளவும். 6) வாணலியில் எண்ணெய் விட்டு, பொடித்த கொத்தமல்லி, சீரகம், நசுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். 7) தக்காளி நன்கு கரைந்த பின், கறிவேப்பிலை,மசித்த பயிறு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும். 8) சூடான சாதத்தில் தேங்காய் எண்ணெய்/நெய் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.