Skip to main content

Posts

Showing posts from 2008

கொங்கு வட்டார வழக்கு - ஏழாவது பாகம்

1.அவியொ - அவர்கள் 2.உங்குனாலே - உங்களாலே 3.அட்டி - கழுத்தில் அணியும் அணி 4.அடிச்சோறு - பாத்திரத்தின் அடியில் தீய்ந்த சோறு 5.அத்துப்படி - முழுவதும் தெரிந்த நிலை 6.அதிக்களம் - ஆணவம் 7.அல்லை - இடுப்பு 8.எரப்பாணி - இரந்து உண்ணுபவன் 9.எருக்காலி - பயந்து நடுங்குவன் 10.ஏர்க்கால் - மாட்டு வண்டியின் முன்பக்கம் 11.ஏறுவெயில் - கதிரவன் மேல் செல்லும் நேரம் 12.ஒடை அடித்தல் - காயடித்தல் 13.ஒவை - மரக்கிளையை அசைத்தல் 14.ஓடை - மேட்டு நிலம் 15.ஓணவாய் - பானையின் உடைந்த வாய்ப்பகுதி 16.கடக்கால் - அடித்தளம் 17.கூடுதொறை - ஆறுகள் கூடுமிடம் 18.கோயல் - கோவில் 19.கச்சல் - குழப்பம், நைந்து விடுதல் 20.கடையாணி - அச்சாணி 21.கந்தர கோலம் - அலங்கோலம் 22.கருமாந்திரம் - திட்டும் சொல் 23.கவட்டி - இரண்டாக விரிந்து செல்லும் குச்சி 24.குக்கல் - நாய் 25.காந்து - வெயிலின் மிகு வெப்பம் 26.கூட்டாஞ்சோறு - பல பொருள்களை ஒன்றாக சமைக்கும் உணவு

கொங்கு வட்டார வழக்கு - ஆறாவது பாகம்

1.அக்கியானம் - தொல்லை, தொந்தரவு 2.அச்சாணியம் - அபச குணம் 3.அட்டுப்பால் - தாய்ப்பாலைத் தவிர்த்துக் கொடுக்கப்படும் மற்ற பால் 4.ஆச்சி - சீதனம், சீர்வரிசைகள் 5.அம்பிலி - சோளக்கூழ் 6.இறவாரம் - கூரையின் சாய்வின் உட்பகுதி 7.இத்தாச்சோடு - மிகப்பெரிய 8.ஊடு - வீடு 9.ஊங்காரம் - காற்றின் ஓசை 10.ஊசை - கொட்டுப் போனது 11.ஊளமூக்கு - சளி நிரம்பிய மூக்கு 12.எசிரி - போட்டி 13.எடங்காடு - insufficient space 14.எம்பொறாப்பு - என்னுடன் பிறந்தவர் 15.ஏகடியம் - கேலி, கிண்டல் 16.ஜயன் - அப்பா, பெரியவர், உயர்ந்தவர் 17.ஒரப்பு - குண்டாகு 18.ஒரம்பு - ஈரநிலம் 19.ஒடம்பு - உடம்பு 20.ஒரு சந்தி - ஒரு வேளை மட்டும் பட்டினி இருத்தல் 21.ஓரி - உடன் பிறந்தவர் யாரும் இல்லாதவர் 22.கடும்பு - சதை போடுதல் 23.கரடு - சிறு குன்று 24.குண்டு - இரைப்பை 25.கொறை - தரிசு நிலம், பயன் படுத்தப் படாத பூமி 26.சிலுப்புதல் - தயிர் கடைதல் 27.தொணெ -

கொங்கு வட்டார வழக்கு: ஐந்தாம் பாகம்

1.அந்தப்பொறம் - அந்தப்பக்கம் 2.அந்தான்டே - அந்தப்பக்கம் 3.அள்ளையில் - பக்கத்தில் 4.இன்னிக்கு - இன்றைக்கு 5.உச்சாணி - உச்சி 6.உம்மை - உண்மை 7.ஓசனை - யோசனை 8.ஓப்பாளம் - கோபம் வந்தால் முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்ளுதல் 9.கண்ணாலம் - திருமணம் 10.கமுத்தி - கவிழ்த்தி 11.குக்கு - உட்கார் 12.குறுக்காட்டி - வழி மறித்தல் 13.கண்ராவி - பார்ப்பதற்கு சசிக்காமை 14.தொறப்புக்கை - திறவுக்கோல் 15.தோண்டி - குடம் 16.காத்தாலை - விடியற் காலை 17.கிச்சு - அக்குள் 18.சாங்கியம் - சடங்கு 19.செலவாந்தரம் - பழமொழி 20.தசுக்கன் - கஞ்சன் , ஏமாற்றுக்காரன் 21.தடுக்கு - ஒலையில் செய்த கீற்று 22.பம்பாதே - பதுங்காதே 23.பிப்பு - அரிப்பு எடுத்தல் 24.முச்சி - முறம் 25.மசையன் - விவரமற்றவன் 26.மப்பு - போதை, மங்கல் 27.வக்கு - வசதி 28.வெக்கை - வெயில் உண்டாகும் அதிகமான வெப்பம் 29.உப்புசம் - புழுக்கம் 30.வளுசல்

தெரியுமுங்களா-2

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நடிகருங்க பத்தின கேள்வி பதில் தானுங்க. இன்னிக்கு சத்யராஜ் பத்தின கேள்விங்க மட்டும். 1) சத்யராஜோட இயற்பெயர் என்னான்னு தெரியுங்களா? 2) கோவை மாவட்டத்துல இருக்கும் அவரோட சொந்த ஊர் எதுங்க? 3) அவரு படிச்ச கல்லூரி? 4) மொதோ படம் எதுங்க? 5) கதாநாயகனா நடிச்ச மொதோ படம் எதுங்க? 6) அவரோட கனவு பாத்திரமா நினைச்சது?

கவைய காளியம்மன் கோவில்

வேதாத்திரி மகரிஷி சிந்தனைகள்-1

கடமை நாம் இந்த உலகத்திற்கு வந்தோம். ஒரு நாள் இதைவிட்டுப் போகப் போகிறோம். இந்தப் பூமியில் நம்முடன் எதுவும் கொண்டு வரவில்லை. நாம் புறப்படும் பொழுது எதுவும் எடுத்துச் செல்ல முடியாது. ஒவ்வொருவருடைய தன்மைக்கேற்ப சூழ்நிலைச் சந்தர்ப்பங்களால் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை ஏற்படுகிறது. ஒவ்வொரு செயலிலும் எந்த அளவு நன்மை செய்ய முடியும் என்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள். உங்கள் மனதைக் கடமையில் செலுத்துங்கள். உங்கள் முயற்சிக்கு அப்பால் எது நடந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் இயற்கைச் சட்டம். நாம் பிறப்பதற்கு முன்பே அந்த ஆற்றல் இருந்து கொண்டிருக்கிறது. நாம் இறந்த பின்பும் அந்தப் பேராற்றல் இருந்து கொண்டிருக்கும். இதில் நாம் கவலைப்படுவதில் என்ன இருக்கிறது. கவலையே கவலைப்படுவதற்கு விட்டுவிடுங்கள்! நாம் வாழும் காலத்தில் நமக்காகவும், சமுதாயத்திற்காகவும் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களைப் பெற்றிருக்கிறோம். அவற்றை நன்குணர்ந்து நல்ல முறையில் நமக்கும், மற்றவர்களுக்கும் திருப்தி தரும் வகையில் நம் கடமைகளைச் செய்ய வேண்டும். அதன் பிறகு மனம் அமைதியடையும். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப

மணிக்கூண்டும், மணி கவிதையும்

கோவை போன போது எடுத்த ஒரு புகைப்படம் கோர்வையாக ஒரு கவிதையும் நினைவுக்கு வந்ததது. அலட்டிக்கொள்ளும் ஆளும்கட்சியாய் "சின்னமுள்" துரத்தினாலும் துவண்டாத எதிர்கட்சியாய் "பெரியமுள்" கூடவே கூத்தடிக்க கூட்டணிக்கட்சியாக "வினாடிமுள்" எப்பொழுதும் போல் அப்பாவி மக்களாய் "எண்கள்"

ஆழியாறு

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வண்ணமிகு இடம் காணும் காட்சி கண்ணுக்கு விருந்து, கற்பனைக்கு ஊற்று, இதயத்திற்கு இதம் தரும். இயற்கைக்கு தான் எத்தனை அழகு இறைவா இறைஞ்சிடு இன்னோரு வாழ்வை இந்த அழகைத்தான் சுவைத்திட உன்னைக்கண்டதும் ஓவியன் என்றால் தூரிகைக்கொண்டு ஓவியம் வரைந்திருப்பான். கவிஞன் என்றால் எழுத்தாணிக்கொண்டு கவிதை எழுதிருப்பான்.