Skip to main content

தமிழ்நாட்டில ச்சூ ச்சூன்னு விளிக்கண்டா

கி்ராஸ்கட் ரோடில் ஸ்டேஷனரிக் கடையில் புத்தகம் (இவர் புத்தக்கக்கடைக்கெல்லாம் போக ஆரம்பிச்சார்னு் யாரும் ஆச்சரியப்படவேண்டியதில்லை, இது த.நா.பா.நூ.நி. வெளியீடு;-) வாங்கிக்கொண்டிருக்கும்போது, ஒரு சேட்டன் 'ச்சூ ச்சூ' என்று கடைக்காரரை அழைக்க, அவர் சொன்னது இது. பாலக்காட்டுப் பக்கத்துல ஒருவர் கவனத்தைக் கவர இப்படி ஓசையிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு மணிநேரப்பயணத்தில் போகக்கூடிய இடத்தில் இப்படியொரு அதிர்ச்சியை அந்தக் கேரளத்து நண்பரும் எதிர்பார்த்திருக்கமாட்டார். 'சாரி, சாரி' என்று ஏற்கனவே இதை அறிந்தும் மறந்தவர் போல அசடு வழிந்தார்.

'கேரளாவுக்குள்ள போய் யாரை வழிகேட்டாலும் உதட்டைப் பிதுக்கி தோளை உயர்த்திக் காட்டி எரிச்சலூட்டுவார்கள்' என்று ஒரு பொது அபிப்ராயம் உண்டு. சிலசமயம் நேரிலேயே அனுபவப் பட்டிருந்தாலும் வலைப்பதிவெல்லாம் வாசிக்க ஆரம்பித்தபின் பொலிடிகலி கரெக்னெஸ் புத்தி அவ்வப்போது பொதுப்புத்தியைக் கேள்வி கேட்டாலும்... ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் ஒரு பொதுவான அணுகுமுறை, வெளிப்பாடு இருக்கும்தானே. நம்மைப்பத்தி கேரளாவுக்குள்ள என்னென்ன மாதிரி பொது அபிப்ராயம் இருக்குன்னு தெரிஞ்சிக்கவும் ஆர்வமா இருக்கு. தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.

Comments

Sanjai Gandhi said…
//நம்மைப்பத்தி கேரளாவுக்குள்ள என்னென்ன மாதிரி பொது அபிப்ராயம் இருக்குன்னு தெரிஞ்சிக்கவும் ஆர்வமா இருக்கு. தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.//

அப்டியே உக்கடம் பஸ் ஸ்டாண்டு கிட்டக்கா போய் நின்னிங்கனா பொள்ளாச்சி பஸ் நெறய வருங்ணா.. அத்த புடிச்சிகினு பொள்ளாச்சீல போய் எறங்கி ஒரு கடல பொட்டலம் வாங்கிகினு கொறிச்சிகினே நடந்திங்கனா கேரளா வந்துருங்ணா( அல்லது போய்ருவோங்ணா :P )

சாய்ங்க்காலத்துக்குள்ள அல்லா மேட்டரயும் தெரிஞ்சிகினு ஊடு வந்துரலாம்ணே.. :)
Kasi Arumugam said…
பொடீ:-)

கேரளாவுக்குப் போய் விசாரிக்கணும்னா பொள்ளாச்சி வளியாப் போவேண்டியதில்லைங், நேராவே போலாங், ஆனா அதில்லீங் அப்ரோச்சு, அங்கேயே இருக்கற நம்மூர்க்காரங்க வாயால உண்ணங் கொஞ்சம் வெளக்கமாக் கேக்கலாம்னுதேனுங்.

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்...

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்...

கொங்கு வட்டார வழக்கு - ‍மூன்றாம் பாகம்

சொற்கள் ஊற்றினை போல சுரந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசிப்பதற்கான நேரமும் மனநிலையும்தான் வருவதில்லை. பின்னூட்டங்கள் வாயிலாகவும், தனி மின்னஞ்சல் மூலமாகவும் இப்பதிவினை குறிப்பிடும் நண்பர்களின் பங்களிப்பு தொடர்ந்து உற்சாகமூட்டுவதாக இருக்கின்றது. இந்தச் சொற்களில் பெரும்பாலானவை என் ஆயாவிடமிருந்து நான் கற்றுக் கொண்டவை. நான் பார்த்த, பார்க்கப் போகும் மனிதர்களுல், ஆயாதான் இந்தச் சொற்களை இறுதியாக பயன்படுத்தியவரோ என்ற பதட்டமும் ஒட்டிக் கொள்கிறது. கிழவி தன்னோடு சேர்த்து புதைத்துக் கொண்டதோ என்ற சந்தேகமும் வருகிறது.இன்னமும் என் மண்ணில் புழங்கிக் கொண்டுதான் இருக்கும் என்றாலும், எனக்கு இவற்றோடான அறிமுகம் அருகிக் கொண்டே வருவதும் இப்படி எண்ணக் காரணமாக இருக்கலாம். 1. வங்கு - பொந்து, சந்து 2. கம்மனாட்டி - முட்டாள், மடையன் 3. உருமாளை - தலைப்பாகை 4. சிம்மாடு - தலைப்பாகை.தலைப்பாகையில் இருந்து சற்று வேறுபட்டது. ஏதேனும் பொருளை தலையில் சுமக்கும் போது நழுவி விடாமல் இருப்பதற்காக துணியைச் சுற்றி வைப்பது. 5. கருப்பு - கருமாதி(ஈமச்சடங்கு) 6. அவுசாரி - விபச்சாரி 7. கட்டுக்கொலை - தன் சாதியைச் சார்ந்த நிகழ்வுகளில் பங்...