Skip to main content

பீளமேடு - பழைய நினைவுகள் ( மீள்ப‌திவு )

(செல்வ‌ன் அவ‌ர்க‌ள் எழுதிய இடுகையை இங்கே அவ‌ரின் அனும‌தியுட‌ன் இட்டுள்ளேன்.ப‌ழைய‌ நினைவுகளை அசை போடும்பொழுது அதுவும் ஒரு சுக‌ம் தான்.)

*****************************************************************************

கோவையில் பல பகுதிகள் ஒவ்வொரு விஷயத்துக்கும் புகழ் பெற்றவை என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த பகுதி பீளமேடு தான்.எனக்கு மட்டுமல்ல கோவையில் உள்ள பலருக்கும் பீளமேடு என்றாலே தனிபாசத்துடன் உருகுவார்கள்.ஏன் என்றால் கோவையின் பெரும்பாலான தனியார் கல்லூரிகள்,ஸ்கூல்கள் பீளமேட்டில் தான் இருக்கின்றன என்பதால் கோவைகாரர்கள் பலரும் இங்கேதான் படித்து,தங்கி,இங்குள்ள மெஸ்களில் உண்டு மகிழ்ந்திருப்பார்கள். அதனால் பலருக்கும் மறக்க முடியாத ஊர் பீளமேடு என்றால் அது மிகையல்ல.

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் காலை 8 மணி முதல் 10 மணிவரை செல்லும் பீளமேடு பஸ்களில் இடம் கிடைப்பது சிவாஜி படத்துக்கு டிக்கட் கிடைப்பதை விட மிக கடினமான காரியம்.அத்தனை கூட்டம் பஸ்களில் இருக்கும்.அத்தனையும் மாணவ மாணவியர் கூட்டம்.காந்திபுரம் டூ ஓப்காலேஜ் போகும் பஸ்கள் வழியெங்கும் நிற்கும் அனைத்து நிறுத்தங்களிலும் ஏதாவது கல்வி நிலையம் இருக்கும்.அப்படி ஒரு பஸ்ஸீல் ஏறிக்கொள்வோம்.ஓப்ஸ் காலேஜுக்கு டிக்கட் வாங்கிக்கொள்வோம்.
பஸ் முதலில் நிற்பது மகளிர் பாலிடெக்னிக் ஸ்டாப்பில்.இது கோவையின் தொன்மையான பாலிடெக்னிக். பாப்பநாயக்கன் பாளையம் ஊர் இங்கே துவங்குகிறது என்று சொல்லலாம்.பஸ் அடுத்து நிற்பது மணி ஸ்கூல் ஸ்டாப்பிங்கில்.மணி ஸ்கூல் கோவையின் மிக புகழ் பெற்ற நிறுவனம்.அரசு உதவி பெறும் தனியார் பள்ளி இது.இதன் எதிரே குப்புசாமி நாயுடு ஆஸ்பத்திரி உள்ளது.லட்சுமி மில் நிர்வாகத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த இரு நிறுவனங்களும் மிக புகழ் பெற்ற நிறூவனங்கள்.திரையுலகை கலக்கி வந்த பாக்கியராஜ் மணிஸ்கூல் மாணவர்தான்.பாப்ப நாயக்கன் பாளையத்தில் பிறந்தவர்.மணிஸ்கூலில் பாக்கியராஜ் அடித்த லூட்டிகளை அந்த ஆசிரியர்கள் கதை கதையாய் சொல்வார்கள்.

அடுத்த ஸ்டாப்பிங் லட்சுமி மில்ஸ்.கோவையின் மிகப்பெரும் மில் இது.ஆயிரக்கணகான தொழிலாளர் பணிபுரியும் நிறுவனம் இது.இப்போது சற்று நலிந்த நிலையில் இருந்தாலும் பிக்-அப் செய்துவிட்டது என்கிறார்கள்.லட்சுமி மில் ஸ்டாப்பிங்கில் தான் புகழ் பெற்ற பீளமேடு துவங்குகிறது.

அடுத்த ஸ்டாப்பிங் நவ இந்தியா. நவ இந்தியா எனும் பத்திரிக்கை அந்த காலத்தில் சக்கை போடு போட்டதாம்.ஆனால் இப்ப அந்த நினைவாக பீளமேட்டுகாரர்களுக்கு இருப்பது நவ இந்தியா பஸ் ஸ்டாப்தான்.நவ இந்தியா பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் எஸ்.என்.ஆர் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் கல்லூரி ஆகியவை இருக்கும்.

எஸ்.என்.ஆர் கல்லூரி நிர்வாகத்தினர் கோவையில் புகழ் பெற்ற ராமகிருஷ்ணா மருத்துவமனையை நடத்தி வருகிறார்கள்.கோவையின் புகழ் பெற்ற தனியார் கல்லூரிகளில் இது ஒன்று.இந்துஸ்தான் கல்லூரி புதிது என்றாலும் சில வருடங்களுக்கு முன்பு 17 நடிகைகளை கல்லூரிக்கு கூட்டி வந்து கோவையையே ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள்.

அடுத்த ஸ்டாப்பிங் எஸ்ஸோபங்க். இங்கே பீளமேடு சாந்தி தியெட்டர் இருக்கும்.சி வகை திரையரங்கு என்பதைதவிர வேறு சிறப்பு ஏதும் இல்லை.

அடுத்த ஸ்டாப் தான் பீளமேடு மெயின் ஸ்டாப்.இதை ராதாகிருஷ்ணா மில் ஸ்டாப் என்றும் அழைப்பார்கள்.இங்கே கோவையின் புகழ் பெற்ற கல்லூரிகளான பி.எஸ்.ஜி பாலிடெக்னிக், பி.எஸ்.ஜி எஞினியரிங்,ஆகியவை உண்டு.பி.எஸ்.ஜிக்கு எதிரே என்.எம்.பி பாக்கரியில் மாணவர் கூட்டம் அலைமோதும்.(பத்து வருடத்துக்கு முந்தியே இங்கே பர்கர் பாணியில் ஒரு ஐட்டம் செய்து அசத்தினார்கள்.)பப்ஸ்,கேக்,டீ ஆகியவை இங்கே புகழ் பெற்ற ஐட்டம்கள்.

கோவையின் புகழ் பெற்ற பழமுதிர் நிலையம் இங்கே உண்டு.அனைத்துவகை கனிகளும்,பழசாறும்,காய்கனிகளும் இங்கே கிடைக்கும்.இந்த ஸ்டாப்பிங்கில் சூப்பரான மெஸ்கள் பல உண்டு.

பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் காண்டினுள் நுழைந்தால் ஓட்டல்களுடன் போட்டி போடும் வெரைடீயில் உணவுகள் கிடைக்கும்.அன்னபூர்ணா மாடலில் சாம்பாரில் மிதக்கும் இட்லி இங்கே ஃபேமஸ்.பாலிடெக்னிக்குக்கு எதிரே இருக்கும் பி.எஸ்.ஜி மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட் கோவையின் புகழ் பெற்ற பிசினஸ் பள்ளியாகும்.அமிர்தா மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடூய்ட் வரும்வரை பி.எஸ்.ஜி தான் கோவையின் நம்பர் ஒன் பிசினஸ் ஸ்கூலாக இருந்தது.

இதே ஸ்டாப்பிங்கில் இருக்கும் சர்வஜன மேல்நிலைப்பள்ளிக்கு மகாத்மா காந்தி ஒருதரம் வருகை புரிந்திருக்கிறார்.அவர் விருந்தினர் வருகை கையேட்டில் கையெழுத்திட்ட குறிப்பு இன்னமும் அந்த பள்ளி நிர்வாகத்தினரால் பாதுகாக்கப்படுகிறது.பீளமேடு மெயின் பஸ்ஸ்டாப்பிலேயே நின்று விட்டால் எப்படி?தொடர்ந்து போவோம்.அடுத்த ஸ்டாப்பிங் கிருஷ்ண்ணம்மாள் கல்லூரி.இங்கே கிருஷ்ணம்மாள் மகளிர் பள்ளியும், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியும் உள்ளன.கோவை நகர இளவட்டங்கள் மாலை நேரமானால் இந்த பக்கம் தான் வட்டமடிப்பார்கள்.ஆனால் கல்லூரி காம்பவுண்டிலேயே போலிஸ் ஸ்டேஷன் இருப்பதால் அடக்கித்தான் வாசிப்பார்கள்:).இந்த நிறுவனமும் பி.எஸ்.ஜி க்ரூப்பை சேர்ந்ததுதான்.இதற்கு அருகில் பி.எஸ்.ஜி மருத்துவமனை இருக்கும்.கோவையின் மிகபெரிய மருத்துவமனை இது.

கிருஷ்ணம்மாள் ஸ்டாப்பிங்கை தாண்டினால் பீளமேட்டின் மெயின் ஏரியா முடிந்துவிடும்.அடுத்து ஓப்ஸ் காலேஜ் என்ற பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் அங்கே கோவை மருத்துவ கல்லூரி,அரசினர் ஆண்கள் பாலிடெக்னிக்,பி.எஸ்.ஜி கலைகல்லூரி, சி.ஐ.டி எஞினியரிங் கல்லூரி, ஜி.ஆர்.டி கல்லூரி, ஜி.ஆர்.ஜி ஸ்கூல், கே.எம்.சி எச் மருத்துவமனை,அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இருக்கும். அதுபோக கோவை விமான நிலையம் இருப்பதும் இங்குதான்.

பீளமேடு கல்வியுடன் ஆன்மிகத்தையும் அளிக்கும் ஊர்.இங்கே அகிலாண்டீஸ்வரி அம்மன் கோயில்,பிளேக் மாரியம்மன் கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றில் பக்தர் கூட்டம் அலைமோதும்.

ஆஸ்பத்திரிகளும், பள்ளிகளும்,கல்லூரிகளும்,மில்களும் நிரம்பிய இடமாக பீளமேடு இருப்பதால் இங்கே கூட்டம் அலைமோதும்.மெயின்ரோட்டை விட்டு ஊருக்குள் போனால் ஏகப்பட்ட கிரைண்டர் தொழிற்சாலைகள், பவுண்டரிகள் ஆகியவை இருக்கும்.இங்கே ஏராளமான தொழிலாளர் வேலை பார்ப்பார்கள்.பீளமேடு சிறக்க காரணமே இந்த சிறுதொழில்கள் தான்.இவைதான் கோவையின் மூலதனமே.ஆம் சுயதொழில் செய்து தாமும் முன்னேறி நாட்டையும் முன்னேற்றும் துடிப்பான உழைப்பாளிகள் நிரம்பிய இடமே பீளமேடு.

Comments

Anonymous said…
நல்ல நினைவு கூறல். அறுமை
இப்ப ரோடும் பெரிசு, கல்வி நிலையங்களும் அதிகமாயிடுச்சு
நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி...
மூன்று பேர் அடங்கிய தேர்வுக்குழுவினரால், தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு முதல் பரிசாக ரூபாய். 2,000/- (இந்திய ரூபாய் இரண்டாயிரம்) வழங்கப்படும்
மேலதிக விபரங்களுக்கு
http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html
என்னுடைய வலைப்பக்கத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி. -சரண்


பிறந்து வளர்ந்த அல்லது வளர்ந்த ஊரைப்பற்றிய நினைவுகளை அசைபோடுவது சுகமானது. நானும் என் வலைப்பூவில் எங்கள் ஊரைப் பற்றி எழுதப் போவதற்கு இந்தப் பதிவும் ஒரு காரணம்.
Shakthi said…
அண்ணா எல்லாம் நல்லாருந்துச்சுங்கனா. அப்படியே ஹோப் காலேஜ் வரைக்கும் வந்திருந்தீங்கன்ன எங்களுக்கும் இன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருந்திருக்கும்..

அருமையான பதிவுங்க
அடடா.. பீளமேட்டை சுற்றி வந்த திருப்தி..
பகிர்வுக்கு நன்றி.. :-)
கோவையின் பழைய கால போட்டோஸ் இருந்தால் எனக்கு அனுப்புங்களேன்,
கோவை கல்வியில் முன்னேறுகிறது, ஆனால் பல விசயங்களில் பின்னேரிக்கொண்டிருக்கிறது, என்று மறுமொ மக்களின் மன நிலை
I have lived in Coimbatore, Pollachi and Erode areas as well.
Great posts on Peelamedu, Erode and Bannari trips.

மிகவும் அருமை.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)