- கோவையிலிருந்து சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் நேரடி விமான சேவை தொடக்கம். விமான நிலையம் இனி 24 மணி நேரமும் செயல்படும் ஒன்றாக இருக்கும்
- உதகை மலை ரயில் நிலச்சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது
- பருவமழையால் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.
- கோவை-தெற்கு(TN-37), கோவை-வடக்கு(TN-38) இவற்றோடு கோவை-மத்தி என்ற புதிய வட்டாரப் போக்குவரத்து அலவலகம் துவக்கப்படுகிறது.
- சற்றுமுன்: மேட்டுப்பாளையம்-உதகை நெடுஞ்சாலையில் பழுது ஏற்பட்டதால் போக்குவரத்து கோத்தகிரி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளது.
கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்
Comments
அல்லாம் உங்களை மாதிரி அசலூர் போனவுங்களுக்காகதான், இளா.
நல்ல 'சேவை'.
ஆமாம்.தூத்துக்குடிக்கு விமானநிலையம் வருதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களெ. எப்பவாம்?
நீங்கள் மீண்டும் பதிவுலகில் இயங்குவது மிக மகிழ்ச்சியளிக்கிறது. தொடருங்கள்.
நீங்கள் மீண்டும் பதிவுலகில் இயங்குவது மிக மகிழ்ச்சியளிக்கிறது.//
நல்வரவு காசி
தெரியலீங்கக்கா, தூத்துக்குடிக்காரவுங்க யாராச்சும் பதில் சொல்வாங்களா பாப்பம்.
செல்வநாயகி, சுரதா,
எனக்கும் சந்தோசம்தான். உங்கள் வரவேற்புக்கு நன்றி.
சின்னம்ணி, முக்கியமா பெட்டியெல்லாம் கொண்டுபோய் மாத்துற வேலை இருக்காது. இடையில் காத்திருக்கிற வேலை இல்லை.
முக்கியமா, நைட்டு 11 மணிக்கு சென்னைல இறங்கி மறுநாள் மத்தியானம் கோவை வர்ர பேஜாரு இனிமே இருக்காது. ஒரு நாள் மிச்சம் பண்ணலாம்.