1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)
நம்மூர்ல மழைங்களா?
Comments
ila
santhosh
அடுத்த பதிவு எப்பங்க ??
என்ன ரொம்ப நாளா புது பதிவே இல்ல.. ??
எனக்கு சொந்த ஊரு கொடுமுடி பக்கமுங்க..ஆனா படிச்சது கோவைங்க...
நம்மூரு போட்டோ எல்லாம் பாக்குறதுக்கு அவ்வளவு நல்லா இருக்குது கண்ணு. நல்ல வேலை பண்ணுன போ. நீ மகராசனா இருக்கோணும்./
நன்றிங்க
Anna, unga azhappu paathen. eppadi naan ennai inaichikaratunnu solli soneengannaa paravaa illa....
Vanakkam. _/\_
Anna, unga azhappu paathen. eppadi naan ennai inaichikaratunnu solli soneengannaa paravaa illa..../
konguvaasal@gmail.com என்னும் முகவரிக்கு ஒரு மடல்
அனுப்புங்கள்
இது எந்த ஊருங்க? (கோவில்பாளையமா)/
கோவில்பாளையமே தான்
இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com