கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்
நம்மூர்ல மழைங்களா?
Comments
ila
santhosh
அடுத்த பதிவு எப்பங்க ??
என்ன ரொம்ப நாளா புது பதிவே இல்ல.. ??
எனக்கு சொந்த ஊரு கொடுமுடி பக்கமுங்க..ஆனா படிச்சது கோவைங்க...
நம்மூரு போட்டோ எல்லாம் பாக்குறதுக்கு அவ்வளவு நல்லா இருக்குது கண்ணு. நல்ல வேலை பண்ணுன போ. நீ மகராசனா இருக்கோணும்./
நன்றிங்க
Anna, unga azhappu paathen. eppadi naan ennai inaichikaratunnu solli soneengannaa paravaa illa....
Vanakkam. _/\_
Anna, unga azhappu paathen. eppadi naan ennai inaichikaratunnu solli soneengannaa paravaa illa..../
konguvaasal@gmail.com என்னும் முகவரிக்கு ஒரு மடல்
அனுப்புங்கள்
இது எந்த ஊருங்க? (கோவில்பாளையமா)/
கோவில்பாளையமே தான்
இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com