கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இன்று (ஆகஸ்ட் 1-ம்) தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று, இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இத்தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். ரூ.100 கோடி வரை பொருட் சேதம் ஏற்பட்டது.
பலரை பலி கொண்ட இந்த நாசவேலை தொடர்பாக அல்-உம்மா இயக்கத்தலைவர் பாட்சா, கேரள மக்கள் ஜன நாயகக் கட்சித் தலைவர் மதானி உள்பட 167 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை 2002ம் ஆண்டு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் துவங்கியது. அனைத்து விசாரணைகளும் இந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி முடிவடைந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 167 பேருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரம் இன்றைய தினம் தெரிய வரும்.குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கலாம், என நீதிபதிகள் கடந்த 27ம் தேதி ஆலோசனை நடத்தினர்.
நாளை தீர்ப்பு வெளியாக இருப்பதால், மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய முக்கிய இடங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இத்தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். ரூ.100 கோடி வரை பொருட் சேதம் ஏற்பட்டது.
பலரை பலி கொண்ட இந்த நாசவேலை தொடர்பாக அல்-உம்மா இயக்கத்தலைவர் பாட்சா, கேரள மக்கள் ஜன நாயகக் கட்சித் தலைவர் மதானி உள்பட 167 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை 2002ம் ஆண்டு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் துவங்கியது. அனைத்து விசாரணைகளும் இந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி முடிவடைந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 167 பேருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரம் இன்றைய தினம் தெரிய வரும்.குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கலாம், என நீதிபதிகள் கடந்த 27ம் தேதி ஆலோசனை நடத்தினர்.
நாளை தீர்ப்பு வெளியாக இருப்பதால், மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய முக்கிய இடங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
Comments