Skip to main content

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

"திருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி
திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள்
கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும்
கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!"
- கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள்.

மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு.

மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம்.

விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல்.

கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது.

'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்று பிரித்தறிய முடியா வண்ணம், உடனே மின்சாரம் போனது. எங்கும் இருள் சூழ்ந்தது. மழை வெட்டித் தள்ளும் வாகனங்களின் ஒளி மட்டும் மினுக்கிக் கொண்டிருந்தது. பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் 'பட் பட்' என இழுத்து மூடப்பட்டன.

நேரம் நழுவிக் கொண்டிருந்தது.

9:31...

9:32...

பின் மெது,மெதுவாக நகரத் தொடங்கினோம். நானும் மற்றொரு நண்பரும் மீண்டும் நம்பிக்கை பெறத் தொடங்கினோம். அந்தப் புள்ளியைக் கடந்த பின் வேகமெடுத்த பேருந்து, கிண்டி நிறுத்தத்தில் நிற்கையில் மணி, 9:45.

அவசர, அவசரமாகப் பின்னோக்கி நடக்கத் தொடங்கினோம்.

சேறும், சகதியும் நம் உடையோடு சேரும் எண்ணத்தோடு சாலை முழுதும் பரவி இருந்தது.

பாஸ்ட் புட் பிரியாணிக் கடை...

சங்கீதா...

பெட்ரோல் பங்க்...

சாய்பாபா கோயிலின் பிரிவு...

மற்றோரு பெட்ரோல் பங்க்...

டாஸ்மாக் கடைச் சந்து..

அனைத்தையும் கடந்து, பயணச்சீட்டுக் கவுண்டர் முன் நின்று மணி பார்க்க...

9:52.

பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு, தாவிக் குதித்து, படிகளில் ஏறிப் பாய்ந்து, மேலேறி, கீழே குதித்து, நடைமேடையை அடைகையில்.. மணி..9:55.

இன்னும் அரை மணி நேரம் மட்டுமே..!

பெருமூச்சோடு வந்து நின்ற மின்சார இரயிலின் ஒரு பெட்டியில் அமர்ந்து, மணியைப் பார்த்துக் கொண்டே, ஸ்டேஷன்களை எண்ணிக் கொண்டே வந்தோம்.

சைதை...

மாம்பலம்..

கோடம்பாக்கம்..

நுங்கம்பாக்கம்...

சேத்துப்பட்டு...

எழும்பூர்...

பார்க்...

நிறுத்தியும் நில்லாமலும், நின்ற பின் இறங்கி, நடைமேடையைக் கடந்து சாலையில் இறங்க ஆயத்தமானால் மற்றுமொரு அதிர்வு.

ரோடெங்கும் சாக்கடை நீர் கரை புரண்டு ஓடுகின்றது. சாலையின் இருபுறமும் பிளாட்பாரக் கடைகள். ஓரமாக எங்கும் ஒதுங்கி நடக்கவே முடியாது. பார்த்தோம். 'இது ஆகிறதில்லை' என்று முடுவெடுத்து, இறங்கினோம்.

'சளக் புளக்' என்று மிதித்துக் கொண்டே, கிட்டத்தட்ட ஓடினோம். சாலையின் இறுதியை அடைந்து, சுரங்கப் பாதை வழி இறங்கி ஓடினோம். கடந்து, மறுபுறம் மேலேறி.. பிரியாணிக் கடையில் யார் மீதோ இடித்து விட்டு, யாரென்றும் பார்க்காமல் ஓடினோம்.

10:20.

மழை நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த, ஆட்டோ ஸ்டேண்ட் தாண்டி, பார்க்கிங் பக்கத்தையும் தாண்டி விட்டு, டிக்கெட் கவுண்டரைக் கடந்து, நடை மேடை 6-ஐ அடைந்தோம்.

10:28.

ஏற்காடு எக்ஸ்பிரஸ் நீண்ட உடலைக் கிடத்தியிருந்தது. எஸ் - 5 கோச் இன்னும் 0.5 கி.மீ நடக்க வேண்டும் என்று தோன்றியதால், அவசர அவசரமாக நடந்தோம். பொதுப் பிரிவு, ஏ.ஸி. கோச், தன்டி எஸ் பிரிவுகளை அடைந்தோம்.

ஏறிக் கொண்ட பின் தான் மூச்சே வந்தது.

சரியான சீட்டை அடைந்து அமர்கையில்...

'கூ ஊஊஊஊஊஊஊஊ....'

ஒரு நீண்ட விசிலோடு நகரத் தொடங்கியது மின்வண்டி.

ஹிக்கின்பாதம்ஸில் ஏதும் புத்தகம் வாங்கவில்லையே என்ற குறையோடு, வேகமாக ஓடத் தொடங்கிய ஏற்காட்டின் வழியே பின்னுக்கு நகர்கின்ற சென்னையை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன்.

மெல்லப் புலர்கின்ற அதிகாலை ஆறு மணி அளவில் சங்ககிரி நிறுத்தம்.



சங்ககிரி நிறுத்தம்.



பால்மடை ஈஸ்வரன் கோயில்.



பால்மடை நல்லபுள்ளி அம்மன் கோயில்.





காவல் தெய்வத்தின் புரவி வாகனங்கள்.


சப்த கன்னிமார்.



திருக்கோயிலின் அருகில் உள்ள வயற்காடுகள்.







திருவிளக்கு.


மலைக்கோயிலை நோக்கிப் நடைப்பயணம் தொடங்கியது.



ஆரம்பத்தில் காணும் சித்தர் மருத்துவ மடம்.



பாறைகளின் மேல் ஏறிச் செல்கின்ற படிக்கட்டுகளின் அணிவரிசை.



நாகராஜா.


பாதி வழியில் வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில் பார்த்த நகரின் பறவைப் பார்வை.


பாறையில் பொறித்த பாம்புப் படம்.


'இதோ நெருங்கி விட்டோம்' என்று நம்பிக்கை ஊட்டுகின்ற இளைப்பறல் மண்டபங்கள்.


திருக்கோயிலின் ஒரு வாசல்.


மண்டபத்தின் சில தூண்கள்.






ஒற்றைக் கால் தவம் புரியும் பரசுராம முனிவர்.


திருக்கோயிலின் ஒரு வாயில் வழி.


ஆஞ்சநேயர் கோயில் செல்லும் வழியில் இருந்து கோயிலின் ஒரு பார்வை.


தென்னாடுடைய சிவனே போற்றி..!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

Comments

Anonymous said…
It was a great journey to the green lands of Sangakiri and temples of Palmadai Amman Koil and Tiruchengodu Arthanariswarar temple. Great capture !! Great post. Good job Kongu !!

-- Sada, Virginia, USA
Hai Sada, Virginia, USA

Very much thanks 4 ur comments.
Machi said…
நல்ல இடுகை रा. वसन्त कुमार् . அப்படியே திருச்செங்கோட்டைப் பற்றியும் கொஞ்சம் சொல்லறது.


எளுத்தாளர்களா இல்லை எழுத்தாளர்களா???
Wow! Nice Post again!

Great work! Keep Up!
Anonymous said…
I loved your post. We used to live in Tiruchengodu. Oh! I miss that place so much. You brought back so many wonderful memories for me.

Thank you for this post.

Ravi
theevu said…
Great post.
G.Ragavan said…
ஒன்னு சொல்றேன் குறிச்சிக்கோங்க. திருச்சேங்கோடு ரொம்பப் பழைய ஊரு. சிலப்பதிகாரத்துல நம்ம எளங்கோ சொல்றாரு "சீர்கெழு செந்திலும் செங்கோடும் நீங்கா இறைவன் கை வேலன்றே" திருச்சேங்கோட்டு அருத்தநாரீர்ஸ்வரரப் பத்தி ஒன்னும் சொல்லலை. ஆனா அங்கயிருக்குற முருகன் கோயிலைப் பத்திச் சொல்றாரு.

பழநி மலைக்கு உள்ள பெருமை திருச்செங்கோட்டுக்கும் உண்டு. இங்க இருக்குற முருகனும் நவபாஷாணந்தான். ஆனா ஒரு வித்யாசம். பழநியில கருப்பு. இங்க வெளுப்பு. இதப் பத்தி நெறைய பேருக்குத் தெரியாது போல.
தமிழ் said…
ஒரு இனிமையான அனுபவத்தை தரும்
நல்ல பதிவுங்க.
அன்பு குறும்பன் ஐயா.. மிக்க நன்றிங்க.. செங்கோட்டைப் பற்றி இன்னும் நீங்கள் தெரிந்து கொள்ள சுட்டுங்கள் : http://www.templenet.com/Tamilnadu/s110.html

Dear Sivabalan sir, thanking you for your kind wishes...

Dear Ravi sir... Thanking You.

Dear theevu sir... Thanking You.

அன்பு ஜி.ரா. ஐயா... மிக்க நன்றிகள் தங்கள் புதிய தகவல்களுக்கு...

அன்பு திகழ்மிளிர் ஐயா...மிக்க நன்றிகள்...
Anonymous said…
Hi, I am from Tiruchengode proper(birthplace. I went to High School there. I miss this place a lot now.I used to go the Hill Temple very ofetn. Your pictures are second to none and bring back a lot of memories for me. In fact, I took a very pleasant trip on my memory highway. You mentioned Nalla Pulli Amman Koil. Is it on the Sankagiri Road? I thought it is Nalli "Valli" Amman Koil. Did you visit Kailasanathar Temple in the middle of the town?

I very much enjoy your post. Great Job. Beautiful snap shots of the Hill Arthanareeswarar Temple. Hats off to you.

Sundar, Dallas, TX,USA
இப்போதுதான் நூல் பிடித்து உள்ளே வந்தேன்.. தமிழ் வாழ் மக்களின் கட்டிடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் உயிர் கொடுத்தது ஆன்மிகத்தின் அம்சமான கோவில்கள்தான் என்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள கோவில்களே சாட்சி. பார்த்தவுடனேயே நேரில் வர வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. செல்வோம்.

//G.Ragavan said...
ஒன்னு சொல்றேன் குறிச்சிக்கோங்க. திருச்சேங்கோடு ரொம்பப் பழைய ஊரு. சிலப்பதிகாரத்துல நம்ம எளங்கோ சொல்றாரு "சீர்கெழு செந்திலும் செங்கோடும் நீங்கா இறைவன் கை வேலன்றே" திருச்சேங்கோட்டு அருத்தநாரீர்ஸ்வரரப் பத்தி ஒன்னும் சொல்லலை. ஆனா அங்கயிருக்குற முருகன் கோயிலைப் பத்திச் சொல்றாரு.
பழநி மலைக்கு உள்ள பெருமை திருச்செங்கோட்டுக்கும் உண்டு. இங்க இருக்குற முருகனும் நவபாஷாணந்தான். ஆனா ஒரு வித்யாசம். பழநியில கருப்பு. இங்க வெளுப்பு. இதப் பத்தி நெறைய பேருக்குத் தெரியாது போல.//

ஜி.ரா. சொன்னது புதிய தகவலாக இருக்கிறது.. என் அப்பன் முருகன் அங்கே வெளுப்பாகவா இருக்கிறான்.. பார்த்தே தீரணும்.. முருகா.. முருகா..
/*
Hi, I am from Tiruchengode proper(birthplace. I went to High School there. I miss this place a lot now.I used to go the Hill Temple very ofetn. Your pictures are second to none and bring back a lot of memories for me. In fact, I took a very pleasant trip on my memory highway. You mentioned Nalla Pulli Amman Koil. Is it on the Sankagiri Road? I thought it is Nalli "Valli" Amman Koil. Did you visit Kailasanathar Temple in the middle of the town?

I very much enjoy your post. Great Job. Beautiful snap shots of the Hill Arthanareeswarar Temple. Hats off to you.
*/

Dear Sundar,

Thanking You for your wishes.
I went to Nall Pulli Amman Temple , which is on Erode road. Maybe another temple exist as Nalla Valli Amman temple.

We went as an one day trip, to attend collegues marriage. so i missed kailasanathar temple. i will note it, for the next trip...
அன்பு உண்மைத் தமிழன்(15270788164745573644)ஐயா...

மிக்க நன்றிகள்...
Anonymous said…
Hi Guys,

This is Muthukumar from Bangalore. I'm working as a senior software engg. in IBM India (P) Ltd, Blore. I'm basically from Tiruchengode.

Unfartunately I have saw this site and your comments about tiruchengode. Guys are telling is really ture. Tgode is a wonderful and historical place.

I have newly launched one site for Tgode LORD arthanareeswarar. I'm sure you can come to know more about Tgode and hill temples thru this site. Site URL is:

www.arthanareeswarar.com

Please have a look an send me your feedback to info@arthanareeswarar.com / amgmuthu@yahoo.com.

Hope your feedback will help me to improve the site. Also forward this URL to your circle as much as possible.

Thanks and Regards
Muthu
Hai Muthu...

Thanks for your comments. We found some small mistakes.... anyhow you are welcome..

But you said as "Unfortunately"... Is it true..?

Your website is nice....
Anonymous said…
அலச்சலே இல்லாம ஆலயமெல்லாம்
காட்டியமைக்கு ரொம்ப நன்றிங்க.
Anonymous said…
Hi Vasanth,

Thanks for you valuable comments.

The word "unfartunately" I used for "Ethir Paramal". Anyhow sorry for that.

You said, you found some small mistake know, pls. send me that deatils. So I can improve the site.

One more questions, how guys are using hindi and tamil for their comments?

Regards,
Muthu
Prabakar said…
hi,

Nice article . i had studied in a college near to thiruchengode for 7 years but things i had not gone to the temple . its missed it .. Nice foto
Muthu must have used the word unfortunately instead of using "unexpectedly"
malathi said…
Hi ,

My native is t.godu , really i proud of the same , bacause the hill was famous for lord muruga & arthareeswarar. Noramlly for all places any one of the god is in famous .

Also Pls note , while hills side view looks like a gent and in another place looks like a lady , you can view thw same while you are roundung the hiils , it looks too nice & amazing , if had a another chance to go there , don't miss hills side view , aswellas kailashanathar temple at middle of the town .

If you ar going on may - 15 to june 15 th , there is very big festivel vishagam festivel is there , this looks too nice don't miss it on your next trip , thanks for published the photos at website to know these things every one. I Really haps off for this
Mohan Brindha said…
Dear Relative,
You have done a very good job on this.
Anonymous said…
அன்பரே, தங்களின் திருச்செங்கோடு பயண அனுபவத்தை கண்டேன், மிக அருமை. திருச்செங்கோடு பாடல் பெற்ற ஸ்தலம். செங்கோட்டு வேலவர் மற்றும் ஆறடி அர்த்தநாரிஸ்வரரும் சுயம்பு வடிவான நவபாசன தோற்றம். நான் பெற்ற பேரின்பம், நான் பிறந்து வளர்ந்து தவிழ்ந்து விளையாடிய திருவூர் திருச்செங்கோடு. ஒரு காலத்தில் ஓதுவார்கள் இல்லாத இத்தளத்தில், தினந்தோறும் கோவிலுக்கு சென்று பாடல்பாடி வழிபடும் என் தகப்பனார் திரு.ரத்தினம் அவர்கள் ஓதுவாராக செயல்பட்டார். என் வாழ்வில் மறக்க முடியாத திருத்தலம் திருச்செங்கோடு. நன்றி, திருஞானசம்பந்தம். USA
Unknown said…
அன்பரே, தங்களின் திருச்செங்கோடு பயண அனுபவத்தை கண்டேன், மிக அருமை. திருச்செங்கோடு பாடல் பெற்ற ஸ்தலம். செங்கோட்டு வேலவர் மற்றும் ஆறடி அர்த்தநாரிஸ்வரரும் சுயம்பு வடிவான நவபாசன தோற்றம். நான் பெற்ற பேரின்பம், நான் பிறந்து வளர்ந்து தவிழ்ந்து விளையாடிய திருவூர் திருச்செங்கோடு. ஒரு காலத்தில் ஓதுவார்கள் இல்லாத இத்தளத்தில், தினந்தோறும் கோவிலுக்கு சென்று பாடல்பாடி வழிபடும் என் தகப்பனார் திரு.ரத்தினம் அவர்கள் ஓதுவாராக செயல்பட்டார். என் வாழ்வில் மறக்க முடியாத திருத்தலம் திருச்செங்கோடு. நன்றி, திருஞானசம்பந்தம். USA
அன்பர்களே இங்குள்ள செங்கோட்டுவேலவர் நவபாஷாணம் அல்ல. கல் விக்கிரகம்தான்.கறுப்பு நிறம்தான். அர்த்தநாரீஸ்வரர் மட்டும்தான் நவபாஷாண விக்கிரகம். அர்த்தநாரீஸ்வரருக்கு தினசரி பகல் உச்சிக்காலத்தில்தான் அபிஷேகம் நடைபெறும். காலை பூஜை உச்சிக்காலம் மற்றும் மாலை 5 மணிக்கு நடைபெறும் சாயரக்ஷை பூஜை காலங்களில் மட்டும் மரகத லிங்க தரிசனம் காணலாம்
hi,
நான் பிறந்த ஊரும் திருச்செங்கோடு... அதை பற்றி தாங்கள் எழுதகண்டு மிக்க மகிழ்ச்சி.!!

எங்கள் ஊரில் வைகாசி விசாக தேர் பிரபளம். முடிந்தால் ஒருதரம் கண்டுகளியுங்கள்..!!

தேர் பற்றிய எனது சிறு குறிப்பு இதோ கீழே.

Regards,
Santhosh Selvarajan
Tiruchengode/Tokyo.

[b]எங்க ஊர் (திருச்செங்கோடு) தேர்....!!![/b]


உயரமோ நான்குமாடி கட்டிடம்
அகளமோ இரண்டானை தடினம்
நான்கு எழடிஉயர சக்கரம்
தேர் சுற்றிலும் பூமாலை தோரணம்சப்பரம் நடுவில் அர்த்தனாரிஸ்வரர் திருக்கோலம்
திரண்டிருந்த மக்களோ பல்லாயிரம்!!!


தேர் சுற்றிவர நான்கு‍‍‍- ரத வீதி
சுற்றிமுடிக்க மூன்று - நாள் தேதி
அன்று தேர் நில‌ம்சேறும் க‌டைசி தேதி!!!


அர்ச்ச‌னை ப‌ல‌முடிந்து முற்ப‌க‌ல் முன்ந‌ட‌க்க‌
ப‌ட்டாசு வேட்டு முழ‌ங்க‌ யானைக‌ள் பின்ந‌ட‌க்க‌
விள‌ம்ப‌ர‌ங்க‌ள் கூவிட‌ ஊர் ம‌க்க‌ள் திற‌ன்டிட‌
அர‌ம்ப‌மாயிற்று அன்றைய‌ தேர்‍‍‍‍‍ ப‌வ‌ன‌ம்!!!


இரும்பு வ‌ட‌ம் தேரில்பூட்ட‌ - அரைமைல் க‌ல்
நீண்ட‌து அந்த‌ க‌ன‌த்த‌ இரும்பு ச‌ங்கிலி
சுற்றியிருந்த‌ ம‌க்க‌ள் கைபிடிக்க‌
நானும் முன்னேறினேன் அதை பிடிக்க‌
ஆனால் கிடைக்க‌ பெற்ற‌தோ கைக‌ள்தான்-
ச‌ங்கிலி இல்லை!!!


சாணை க‌ட்டைக‌ள் முட்டுகுடுக்க‌
ஊதுவோர் ஊத.. யானைக‌ள் முட்ட‌
கையோடு கை சேர்த்து கை‍-ச‌ங்க‌லியால் தேரை க‌ட்டியிழுக்க‌
அசைந்தாடிய‌து அழங்கார‌ குன்று!!!


வெற்றுகாலை வெயில் வெட்டியெடுக்க‌
முன்னெறினோம் ம‌திய‌வெயிலில் ம‌ண்டைபிள‌க்க‌!!!


குழந்தையை போல் அசைந்தாடியும்
கும‌ரி போல் அண்ண‌ந‌டையும்
ப‌ருவ‌ப்பெண் போல் க‌டைக‌ண்பார்த்தும்
நில‌ம்சேர்ந்த‌து அம்மைய‌ப்ப‌ன் தேர்!!!


குறிப்பு:

1. நில‌ம் சேர்த்த‌ல் = தொட‌ங்கிய‌ இட‌ம் வ‌ந்து சேர்த‌ல்
2. அர்த்தனாரிஸ்வரர் = அம்மைய‌ப்ப‌ன் = ஆண்பாதி (சிவ‌ன்) பெண் பாதி (பார்வ‌தி) க‌ல‌ந்த‌ தோற்ற‌ம்.இவ்வாறான‌ சிவ‌‍-பார்வ‌தி தோற்ற‌த்தை திருச்செங்கோட்டில் ம‌ட்டுமே பார்க்க‌ முடியும். இது இத்திருத‌ல‌த்தின் சிற‌ப்ப‌ம்ச‌மாகும்.
திரு சந்தோஷ் செல்வராஜன் எங்கள் ஊர் தேர் பற்றி அழகிய கவிதை பதிந்துள்ளார். அந்தத் தேரின் போட்டோவும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். தங்கள் மின்னஞ்சல் முகவரி தெரிவித்தால் போட்டோ அனுப்புகிறேன்
KRISHNA said…
hi i'm krishnamoorthy... my native is thottapadi.. but now i'm in UK.. my temple also nalla pulli amman... by this now i'm seeing god infront of me... gud...
sasi said…
பால்மடை நல்லபுள்ளி அம்மன் கோயில்.

really very happy i saw in the internet

sasidharan,kuwait
Dinesh Kumar said…
நல்லபுள்ளி அம்மன் கோயில்.
My Kula Theiva Koil

Dinesh@ Ravi - Katukkotai(Gandhipuram)
தங்க.தமிழ் said…
அருமையான தகவல்கள்...
-நன்றி...
---
தங்க.தமிழ்,
ஊனத்தூர்
Unknown said…
hi i am hema
palmadai nalla pulli amman kovil is home temple. its nice to see in this blog. it is a very powerful god. go and praise the lord. she will give blessings to all.
Unknown said…
its nice nalla pulli amman koil is my kula theiva koil.
SELVARAJ said…
எனக்கும் பால்மடை நல்ல புள்ளி அம்மன் தான் குலதெய்வம். நீங்கள் நல்ல புள்ளி அம்மன் பெயரில் ஒரு வெப்சைட் ஆரம்பிக்கலாமே . நமது பங்காளிகளை அதில் ஒருங்கிணைத்து தகவல் பரிமாற்றம் செய்து வரலாமே ?
SELVARAJ said…
நம் நல்ல புள்ளி அம்மனுக்கு உரலில் இடிக்கும் ஓசை, அம்மியில் அரைக்கும் ஓசை ஆகாது என்பதால் ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தில் அம்மன் எழுந்தருளி உள்ளார் என்று சொல்வார்கள். நமது பங்காளிகள் எவருக்காவது திருமணம் நடைபெற்ற நாட்களில் அம்மன், காம்பவுண்ட் சுவர் ஓரமாக அமைந்துள்ள படிக்கட்டுகளில் ஏறி திருமணம் செய்த குடும்பத்தினரிடமிருந்து கல்யாணப்படி(பொங்கல் வைக்க படி அரிசி) கொண்டு வருகிறார்களா என்று ஆவலுடன் நமது அம்மன் பார்க்கும் என்று சொல்வார்கள் !!!
SELVARAJ said…
நல்ல புள்ளி அம்மன் கோயில் தலவரலாறு பற்றிய தகவல் தெரிந்தால் பதிவு செய்யுங்களேன் !
அம்மன்திருஉருவப்படத்தை பதிவிடுங்கள்.
SELVARAJ said…
நல்ல புள்ளி அம்மன் கோயில் தலவரலாறு தெரிந்தால் பதிவு செய்யுங்களேன்.அம்மன் திருஉருவபடம் இருந்தால் பதிவிடுங்கள் . நன்றி.

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)