- கோவையிலிருந்து சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் நேரடி விமான சேவை தொடக்கம். விமான நிலையம் இனி 24 மணி நேரமும் செயல்படும் ஒன்றாக இருக்கும்
- உதகை மலை ரயில் நிலச்சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது
- பருவமழையால் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.
- கோவை-தெற்கு(TN-37), கோவை-வடக்கு(TN-38) இவற்றோடு கோவை-மத்தி என்ற புதிய வட்டாரப் போக்குவரத்து அலவலகம் துவக்கப்படுகிறது.
- சற்றுமுன்: மேட்டுப்பாளையம்-உதகை நெடுஞ்சாலையில் பழுது ஏற்பட்டதால் போக்குவரத்து கோத்தகிரி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளது.
1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)
Comments
அல்லாம் உங்களை மாதிரி அசலூர் போனவுங்களுக்காகதான், இளா.
நல்ல 'சேவை'.
ஆமாம்.தூத்துக்குடிக்கு விமானநிலையம் வருதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களெ. எப்பவாம்?
நீங்கள் மீண்டும் பதிவுலகில் இயங்குவது மிக மகிழ்ச்சியளிக்கிறது. தொடருங்கள்.
நீங்கள் மீண்டும் பதிவுலகில் இயங்குவது மிக மகிழ்ச்சியளிக்கிறது.//
நல்வரவு காசி
தெரியலீங்கக்கா, தூத்துக்குடிக்காரவுங்க யாராச்சும் பதில் சொல்வாங்களா பாப்பம்.
செல்வநாயகி, சுரதா,
எனக்கும் சந்தோசம்தான். உங்கள் வரவேற்புக்கு நன்றி.
சின்னம்ணி, முக்கியமா பெட்டியெல்லாம் கொண்டுபோய் மாத்துற வேலை இருக்காது. இடையில் காத்திருக்கிற வேலை இல்லை.
முக்கியமா, நைட்டு 11 மணிக்கு சென்னைல இறங்கி மறுநாள் மத்தியானம் கோவை வர்ர பேஜாரு இனிமே இருக்காது. ஒரு நாள் மிச்சம் பண்ணலாம்.