கி்ராஸ்கட் ரோடில் ஸ்டேஷனரிக் கடையில் புத்தகம் (இவர் புத்தக்கக்கடைக்கெல்லாம் போக ஆரம்பிச்சார்னு் யாரும் ஆச்சரியப்படவேண்டியதில்லை, இது த.நா.பா.நூ.நி. வெளியீடு;-) வாங்கிக்கொண்டிருக்கும்போது, ஒரு சேட்டன் 'ச்சூ ச்சூ' என்று கடைக்காரரை அழைக்க, அவர் சொன்னது இது. பாலக்காட்டுப் பக்கத்துல ஒருவர் கவனத்தைக் கவர இப்படி ஓசையிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு மணிநேரப்பயணத்தில் போகக்கூடிய இடத்தில் இப்படியொரு அதிர்ச்சியை அந்தக் கேரளத்து நண்பரும் எதிர்பார்த்திருக்கமாட்டார். 'சாரி, சாரி' என்று ஏற்கனவே இதை அறிந்தும் மறந்தவர் போல அசடு வழிந்தார்.
'கேரளாவுக்குள்ள போய் யாரை வழிகேட்டாலும் உதட்டைப் பிதுக்கி தோளை உயர்த்திக் காட்டி எரிச்சலூட்டுவார்கள்' என்று ஒரு பொது அபிப்ராயம் உண்டு. சிலசமயம் நேரிலேயே அனுபவப் பட்டிருந்தாலும் வலைப்பதிவெல்லாம் வாசிக்க ஆரம்பித்தபின் பொலிடிகலி கரெக்னெஸ் புத்தி அவ்வப்போது பொதுப்புத்தியைக் கேள்வி கேட்டாலும்... ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் ஒரு பொதுவான அணுகுமுறை, வெளிப்பாடு இருக்கும்தானே. நம்மைப்பத்தி கேரளாவுக்குள்ள என்னென்ன மாதிரி பொது அபிப்ராயம் இருக்குன்னு தெரிஞ்சிக்கவும் ஆர்வமா இருக்கு. தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.
'கேரளாவுக்குள்ள போய் யாரை வழிகேட்டாலும் உதட்டைப் பிதுக்கி தோளை உயர்த்திக் காட்டி எரிச்சலூட்டுவார்கள்' என்று ஒரு பொது அபிப்ராயம் உண்டு. சிலசமயம் நேரிலேயே அனுபவப் பட்டிருந்தாலும் வலைப்பதிவெல்லாம் வாசிக்க ஆரம்பித்தபின் பொலிடிகலி கரெக்னெஸ் புத்தி அவ்வப்போது பொதுப்புத்தியைக் கேள்வி கேட்டாலும்... ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் ஒரு பொதுவான அணுகுமுறை, வெளிப்பாடு இருக்கும்தானே. நம்மைப்பத்தி கேரளாவுக்குள்ள என்னென்ன மாதிரி பொது அபிப்ராயம் இருக்குன்னு தெரிஞ்சிக்கவும் ஆர்வமா இருக்கு. தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.
Comments
அப்டியே உக்கடம் பஸ் ஸ்டாண்டு கிட்டக்கா போய் நின்னிங்கனா பொள்ளாச்சி பஸ் நெறய வருங்ணா.. அத்த புடிச்சிகினு பொள்ளாச்சீல போய் எறங்கி ஒரு கடல பொட்டலம் வாங்கிகினு கொறிச்சிகினே நடந்திங்கனா கேரளா வந்துருங்ணா( அல்லது போய்ருவோங்ணா :P )
சாய்ங்க்காலத்துக்குள்ள அல்லா மேட்டரயும் தெரிஞ்சிகினு ஊடு வந்துரலாம்ணே.. :)
கேரளாவுக்குப் போய் விசாரிக்கணும்னா பொள்ளாச்சி வளியாப் போவேண்டியதில்லைங், நேராவே போலாங், ஆனா அதில்லீங் அப்ரோச்சு, அங்கேயே இருக்கற நம்மூர்க்காரங்க வாயால உண்ணங் கொஞ்சம் வெளக்கமாக் கேக்கலாம்னுதேனுங்.