Skip to main content

கொங்கு வட்டார வழக்கு - ஆறாவது பாகம்



1.அக்கியானம் - தொல்லை, தொந்தரவு

2.அச்சாணியம் - அபச குணம்

3.அட்டுப்பால் - தாய்ப்பாலைத் தவிர்த்துக் கொடுக்கப்படும் மற்ற பால்

4.ஆச்சி - சீதனம், சீர்வரிசைகள்

5.அம்பிலி - சோளக்கூழ்

6.இறவாரம் - கூரையின் சாய்வின் உட்பகுதி

7.இத்தாச்சோடு - மிகப்பெரிய

8.ஊடு - வீடு

9.ஊங்காரம் - காற்றின் ஓசை

10.ஊசை - கொட்டுப் போனது

11.ஊளமூக்கு - சளி நிரம்பிய மூக்கு

12.எசிரி - போட்டி

13.எடங்காடு - insufficient space

14.எம்பொறாப்பு - என்னுடன் பிறந்தவர்

15.ஏகடியம் - கேலி, கிண்டல்

16.ஜயன் - அப்பா, பெரியவர், உயர்ந்தவர்

17.ஒரப்பு - குண்டாகு

18.ஒரம்பு - ஈரநிலம்

19.ஒடம்பு - உடம்பு

20.ஒரு சந்தி - ஒரு வேளை மட்டும் பட்டினி இருத்தல்

21.ஓரி - உடன் பிறந்தவர் யாரும் இல்லாதவர்

22.கடும்பு - சதை போடுதல்

23.கரடு - சிறு குன்று

24.குண்டு - இரைப்பை

25.கொறை - தரிசு நிலம், பயன் படுத்தப் படாத பூமி

26.சிலுப்புதல் - தயிர் கடைதல்

27.தொணெ - துணை

Comments

எசிரி என்பதை நாங்கள் (ஈரோட்டுப்பக்கம்) எசிலி என்போம். லகரமும் ரகரமும் போலிகளோ? (லப்பர்- ரப்பர்)
தமிழ் said…
உண்மை தான்

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்...

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)

கவைய காளியம்மன் கோவில்