Skip to main content

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்


1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன்

( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு )

2.கருமன் - பன்றி

3.சொண்டி - இடது கை பழக்கமுடையன்

4.மொறையுது - சத்தமிடுதல்

( வயிரு மொறையுது )

5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு

6.கரடு - குன்று

7.கரிசம் - அன்பு, சிரத்தை

(கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது)

8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி



9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ......


10.குடுமி - தலையுச்சி, கொண்டை

( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் )


11.கூடக்கூட - உடனுக்குடன்

( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு )

12.கும்பி - வயிறு

13.கெடுவு - முறை,தவணை

( எத்தன கெடுவு கொடுக்கறது )

14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல்

( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்)

( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் )

( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)

Comments

Anonymous said…
Just now i saw this blog and surprised with that content.

Good collection of words.. when I read this, I could recall my childhood.. Felt happy when I see the language which i am using.. Chennai life made me forget some of those... I always want to be with that nativity...
Thanks for this posting and made me remember all my colorful memories..
தமிழ் said…
நன்றி நண்பரே
'நரிக்கு இடம் கொடுத்தா கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்' பழமொழியில் கிடை என்பது ஆட்டுக் கூட்டத்தையே குறிக்கும் என நினைக்கிறேன் நண்பா.

எதற்கும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
தமிழ் said…
/ நாடோடி இலக்கியன் said...

'நரிக்கு இடம் கொடுத்தா கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்' பழமொழியில் கிடை என்பது ஆட்டுக் கூட்டத்தையே குறிக்கும் என நினைக்கிறேன் நண்பா.

எதற்கும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்/

நன்றி நண்பரே



ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல

இந்தப் பழமொழியில் கிடை என்பது கூட்டம் எனப் பொருள் படும்.

ஆனால் கீழ்க்கண்ட பழமொழியில் பாருங்கள்

நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு எட்டு ஆடு கேட்குமாம்

இங்கே கிடை என்பதற்கு கூட்டம் என்பதை விட நேரம் என்று பொருள் கொள்வதே நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது .

இன்னும் கிடை என்பதற்கு எத்தனையே பொருள் உண்டு

கிடை _ நெட்டி : கிடக்கை : நோயில் விழுகை : இருப்பிடம் : வேத பாடசாலை : வேதம் ஓதும் குழாம் : ஆயுதம் : பயிலிடம் : ஆட்டுக் கிடை : உட் கிடை : ஐயம் : உவமை : சடை மரம் .
கிடைக்காரன் _ ஆட்டுக் கிடைக்கு உரியவன்.
கிடைச் சரக்கு _ நாட் பட்ட சரக்கு.
கிடைத்தல் _ அடைதல் : பெறுதல் : இயைதல் : அணுகல் : எதிர்த்தல்.
கிடைப்பாடு _ நோய்.
கிடை வைத்தல் _ உரத்திற்காக கால்நடைகளை வயலிற் கட்டுதல்.

(என்ன ஆச்சு, ஒரே கிடையா இருக்கா? மருத்துவர் கிட்டே
போகலாமா?)

இப்படி

இருந்தும்
சரிபார்த்துக் கொள்கின்றேன் நண்பரே
Shakthi said…
ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த தொகுப்ப பார்த்து... எவ்ளோ நாள் ஆச்சு....

என்னோட ப்ளாக் ல உங்க அனுமதி இல்லாமையே இதை பத்தி போட்டுட்டு இதுக்கான லிங்க் கொடுத்துட்டேன்.. நம்ம ஆளுங்களுக்கு உதவலாம்னு தான். தப்ப எடுத்துக்க மாட்டேங்க்களே ??
http://sakthitalks.blogspot.com/2010/03/blog-post_10.html
I was under the impression that it is just Tamizh. Good to note that this is Kongu vattara vazhakku.
Robert B Grubh said…
அன்புள்ள தமிழ் அன்பர்களே, வணக்கம். நான் தமிழ் வட்டார வழக்குகளைப்பற்றி சற்று அறிய விரும்புகிறேன். அதற்கு உங்கள் உதவி மிகவும் தேவை. நன்றி.
அறியவேண்டியது:
"அவர்கள் வாழைப்பழம் வாங்க கடைக்குப்போனார்கள்"
இந்த வாக்கியத்தை சிவகாசி/விருதுநகர், தஞ்சாவூர், கோவை (கோயம்புத்தூர்), வேலூர் போன்ற இடங்களிலுள்ள வட்டார வழக்குகளில் எவ்வாறு பேசுகிறார்கள் என்பதை தயவுசெய்து எனக்கு தெரிவியுங்கள். நன்றி. எனது மின்னஞ்சல் rbgrubh@hotmail.com

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்