Skip to main content

கொங்கு செய்திகள் - நவ. 1, 2007

  1. சேலம் ரயில்வே கோட்டம் இன்று தொடக்க விழா. அமைச்சர் லாலு தலைமை தாங்க, முதல்வர் கலைஞர் தொடக்கி வைக்கிறார்.
  2. பாரதியார் பல்கலைக்கழகத்தில் கொசு ஆராய்ச்சி மையம் தொடக்கம்.
  3. உக்கடம் ரயில்வே மேம்பாலம் வரும் சனிக்கிழமை முதல் போக்குவரத்துக்குத் திறப்பு.
  4. கோவையில் ரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலி தீபாவளிக்குள் சேவை தொடங்கும். நிகழ்சி்கள் கொங்கு வட்டார வழக்கிலேயெ அதிகம் இருக்கும்

Comments

நல்ல செய்திகள்தானுங்க சாமி!
தொடர்ந்து போடுவீங்களா?
Kasi Arumugam said…
வாங்கய்யா,

சந்தோசமுங்க. தினமும் பேப்பர் படிச்சு, மாநிலச் செய்தி கேட்டு முடிச்சா, ஒரு நாலு வரி எளுத சமாச்சாரமா கிடைக்காது? தொடர்ந்து போடுவதாகத்தான் உத்தேசம். பாக்கலாம்.
Anonymous said…
//உக்கடம் ரயில்வே மேம்பாலம் வரும் சனிக்கிழமை முதல் போக்குவரத்துக்குத் திறப்பு.
//

Happy to hear the news.
ilavanji said…
காசியண்ணே!

செய்திகள் பற்றிய உங்கள் விமர்சனங்களையும் பன்ச் லைனையும் சேர்த்துக்கிட்டிங்கன்னா அப்பறம் பின்னாடி நாங்க கூட்டமா வந்து பின்னூட்டத்துல அடிச்சுக்கறது வசதியா இருக்கும்! ஹிஹி...

// பல்கலைக்கழகத்தில் கொசு ஆராய்ச்சி மையம் தொடக்கம்.//

ஆராய்ச்சி மையமெல்லாம் அளவு பார்த்துதான் கட்டுனாங்களாமா? ஏன்னா பீளமேடு கொசு ஒவ்வொன்னும் பசு சைசுல இருக்கும்!

// கோவையில் ரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலி தீபாவளிக்குள் சேவை தொடங்கும்//

சூரியன் FMல சின்னதம்பி பெரியதம்பி கேப்பீங்களா? எனக்கென்னவோ கோவை நிகழ்ச்சிய விட சென்னை பெரியதம்பிதான் இயல்பா இருக்கறமாதிரி இருக்கு. அந்தாளுக்கு குரல்தான் வரம். சரியான ரேடியோ கவுண்டமணி அவரு! :)
என்ன காசி, செய்தி வாசிப்பாளரா புது அவதாரமா ? :)

ஆரம்ப காலம் மாதிரி, அப்பப்ப ஏதாவது பதியுங்க!

When I write this comment, I suddenly had a recollection of your 'உப்புமா' related posting ;-)

//
காசியண்ணே!

செய்திகள் பற்றிய உங்கள் விமர்சனங்களையும் பன்ச் லைனையும் சேர்த்துக்கிட்டிங்கன்னா அப்பறம் பின்னாடி நாங்க கூட்டமா வந்து பின்னூட்டத்துல அடிச்சுக்கறது வசதியா இருக்கும்!
//
இது தான் நம்ம இளவஞ்சி பன்ச் :)))

எ.அ.பாலா
Kasi Arumugam said…
இளவஞ்சி,

அதுவும் நல்லாத்தான் இருகும், ஆனா அதுக்கெல்லாம் உக்காந்து யோசிக்கணுமே, இது போற போக்கில அடிச்சுவிடரது. பாக்குறேன்.

எ.அ.பாலா,

:-)

சந்தடி சாக்கில், எனக்கு ஏற்கனவே உப்புமா பதிவர்னு பேர் இருக்கிறத ஞாபகப்படுத்திட்டீங்களே:(

இனிமேல் அதுகூட இல்லை, கருவேப்பிலை பதிவர்தான் சரியா இருக்கும்.:-))
Kasi Arumugam said…
பஞ்ச்லைன் அட்டம்ப்ட்டு:

சேலம் ரயில்வே கோட்டம் இன்று தொடக்க விழா. அமைச்சர் லாலு தலைமை தாங்க, முதல்வர் கலைஞர் தொடக்கி வைக்கிறார்.

(அதே நேரத்தில் வைகோ பொள்ளாச்சியில் உண்ணாவிரதம்.) ஹும், எங்கே இருக்கவேண்டியவர் எங்கே!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் கொசு ஆராய்ச்சி மையம் தொடக்கம்.
சுத்தியும் சாக்கடைத் தண்ணீர் நிற்க குழி தோண்டும் பணி துவக்கம்

உக்கடம் ரயில்வே மேம்பாலம் வரும் சனிக்கிழமை முதல் போக்குவரத்துக்குத் திறப்பு.
25 வருசத்துக்கு முன் கல் நட்டிய ஈச்சனாரி ரயில்வே க்ராசிங் மேம்பாலம் எததனையாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நடப்புக்கு வரும்னு எங்க தாத்தா கேட்கிறார்

கோவையில் ரேடியோ *மிர்ச்சி* பண்பலை வானொலி தீபாவளிக்குள் சேவை தொடங்கும். நிகழ்ச்சிகள் கொங்கு வட்டார வழக்கிலேயே அதிகம் இருக்கும்
எந்த 'வட்டார வழக்கில்' அறுத்தாலும் *மொளகாய்* அரைப்பது நம் தலையில்தானே!

(ம்ஹும், தேறுவேனா?)
காசி,

தேறுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாகத் தான் தோன்றுகிறது :)

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், keep trying :)

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்...

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்...

பீளமேடு - பழைய நினைவுகள் ( மீள்ப‌திவு )

( செல்வ‌ன் அவ‌ர்க‌ள் எழுதிய இடுகையை இங்கே அவ‌ரின் அனும‌தியுட‌ன் இட்டுள்ளேன்.ப‌ழைய‌ நினைவுகளை அசை போடும்பொழுது அதுவும் ஒரு சுக‌ம் தான்.) ***************************************************************************** கோவையில் பல பகுதிகள் ஒவ்வொரு விஷயத்துக்கும் புகழ் பெற்றவை என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த பகுதி பீளமேடு தான்.எனக்கு மட்டுமல்ல கோவையில் உள்ள பலருக்கும் பீளமேடு என்றாலே தனிபாசத்துடன் உருகுவார்கள்.ஏன் என்றால் கோவையின் பெரும்பாலான தனியார் கல்லூரிகள்,ஸ்கூல்கள் பீளமேட்டில் தான் இருக்கின்றன என்பதால் கோவைகாரர்கள் பலரும் இங்கேதான் படித்து,தங்கி,இங்குள்ள மெஸ்களில் உண்டு மகிழ்ந்திருப்பார்கள். அதனால் பலருக்கும் மறக்க முடியாத ஊர் பீளமேடு என்றால் அது மிகையல்ல. கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் காலை 8 மணி முதல் 10 மணிவரை செல்லும் பீளமேடு பஸ்களில் இடம் கிடைப்பது சிவாஜி படத்துக்கு டிக்கட் கிடைப்பதை விட மிக கடினமான காரியம்.அத்தனை கூட்டம் பஸ்களில் இருக்கும்.அத்தனையும் மாணவ மாணவியர் கூட்டம்.காந்திபுரம் டூ ஓப்காலேஜ் போகும் பஸ்கள் வழியெங்கும் நிற்கும் அனைத்து நிறுத்தங்களிலும் ஏதாவது கல்வி நிலையம்...