Skip to main content

ஆழியாறு


வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாத
வண்ணமிகு இடம்







காணும் காட்சி
கண்ணுக்கு விருந்து,
கற்பனைக்கு ஊற்று,
இதயத்திற்கு இதம் தரும்.





இயற்கைக்கு தான் எத்தனை அழகு
இறைவா
இறைஞ்சிடு
இன்னோரு வாழ்வை
இந்த அழகைத்தான் சுவைத்திட








உன்னைக்கண்டதும்
ஓவியன் என்றால்
தூரிகைக்கொண்டு
ஓவியம் வரைந்திருப்பான்.
கவிஞன் என்றால்
எழுத்தாணிக்கொண்டு
கவிதை எழுதிருப்பான்.



Comments

அருமையான படங்கள்.பகிர்ந்தமைக்கு நன்றிங்க..
தமிழ் said…
நன்றி

ILA(a)இளா
Anonymous said…
Excellent pictures.I really loved it. Your pictures are feast for my eyes. Thanks.

Rumya
Anonymous said…
நல்ல படங்கள். மலையோர படகு சவாரி படங்கள் மட்டும் குறை.
நல்லா இருக்கு படங்கள்.. போன தடவை வீடியோகேமிராவோட போனப்போ பணம் எக்கச்சக்கமா கேட்டாங்க காரிலேயே வச்சிட்டு போயிட்டோம்... ஸ்டில் கேமிரா அடுத்த த்டவை எடுத்துட்டு வரனும்ன்னு நினைச்சுக்கிட்டு சுத்திட்டு வந்தோம்..
Kasi Arumugam said…
நல்லாருக்கு:-)
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஆழியாறு அணைக்கு ஒருநாள் சுற்றுலாவுக்குப் போய்வந்ததை நினைவுபடுத்திவிட்டீர்கள்... நன்றி.
தமிழ் said…
Rumya said

/
Excellent pictures.I really loved it. Your pictures are feast for my eyes/

thanks....
தமிழ் said…
/முத்துலெட்சுமி said...

நல்லா இருக்கு படங்கள்.. போன தடவை வீடியோகேமிராவோட போனப்போ பணம் எக்கச்சக்கமா கேட்டாங்க காரிலேயே வச்சிட்டு போயிட்டோம்... ஸ்டில் கேமிரா அடுத்த த்டவை எடுத்துட்டு வரனும்ன்னு நினைச்சுக்கிட்டு சுத்திட்டு வந்தோம்../

நன்றிங்க


இயற்கையின் வரப்பிரசாதங்க

இந்த இடங்க
தமிழ் said…
/Kasi Arumugam - காசி said...

நல்லாருக்கு:-)/

நன்றிங்க

உங்களின்
கருத்துக்கும் வருகைக்கும்
தமிழ் said…
/சேதுக்கரசி said...

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஆழியாறு அணைக்கு ஒருநாள் சுற்றுலாவுக்குப் போய்வந்ததை நினைவுபடுத்திவிட்டீர்கள்... நன்றி./

நன்றிங்க
அருமையான புகைப்படங்கள்,அப்படியே குரங்கருவி புகைப்படம் இருந்தால் இணைத்து விடுங்கள்.எனக்கு எத்தனை தடவை போனாலும் சலிக்காத இடம் ஆழியாறு.ரொம்ப அருமையா பதிவு பண்ணியிருக்கீங்க,படங்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
Anonymous said…
நானும் அங்கே சென்றிருந்தேன். அருமையான இடம். என்னுடைய புகைப்படங்களையும் பாருங்க.

நன்றி

http://vizhiyan.wordpress.com/2007/12/12/vizhiyan-photography-22/

- விழியன்
தமிழ் said…
நன்றி நாடோடி இலக்கியன்

புகைப்படம் இல்லை,இருந்தாலும்
ஒளிப்பேழை இணைத்துள்ளேன்
தமிழ் said…
நன்றி
விழியன்,
உண்மையாக
உங்களின் ஒவ்வொரு புகைப்படமும்
அருமை

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)