இன்று செய்திகள் அதிகமில்லை!
- பொள்ளாச்சியில் வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் - சேலம் கோட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளை சேர்க்காததை எதிர்த்து. (சேர்த்திருந்தால், கோட்டத்துக்கு கோவை (அ) பொள்ளாச்சியைத் தலைமையிடமாக அறிவிக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்திருப்பார்களோ?)
- கோவை மாநராட்சி கலையரங்கத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வேண்டும் : மேயர் வெங்கடாசலம் (இடத்துக்கும் ஊருக்கும் ஆள் பெயர் வைப்பதெல்லாம் ஒரு சுற்று போய் அடங்கியிருக்கிறது. பழையபடி அதைத் தொடங்கி வைக்கணுமா? ஒரு கலையரங்கத்துப் பெயருக்குள்ள திருவள்ளுவர் பெருமை அடங்காது)
- ரயில்வே லாபத்துக்கு காரணம் லாலு அல்ல; வேலுதான்: சேலத்தில் மருத்துவர் ராமதாஸ் (தினமலர் இதைச் சொல்வதால் கொஞ்சம் காரண காரியங்களை ஆராய்வேண்டியுள்ளது)
Comments
பொள்ளாச்சியை மீட்க வைகோ உண்ணாவிரதமுன்னு.
யார்கிட்டெ அடமானம் வச்சுருக்காங்க பொள்ளாச்சியைன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தெனுங்க.