Skip to main content

2: கொங்குதேசம்

கொங்குதேசம் அல்லது கொங்குநாடு''ன்னு பொதுவா சொல்றது, கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தையே பெரும்பாலும் குறிச்சாலும், அதன் பரப்பளவு கொஞ்சம் விஸ்தாரமானதுங்க. இன்னைக்கு பல்வேறு மாவட்டங்களா தாலுக்காவா பிரிஞ்சிருக்கிற 'பழநி, தாராபுரம், கரூர், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம், ஈரோடு, தர்மபுரி, சத்யமங்கலம், நீலகிரி, அவிநாசி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, இப்படி எல்லா ஊர்களையும் உள்ளடக்கியது தான் கொங்குநாடு.



தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டிய மன்னர்கள் மட்டுமில்லாம, ஹவுசல்ய மன்னர்களும் முகம்மதிய மன்னர்கள் ஆட்சிக்கும் உட்பட்டிருந்த கொங்குதேசம், 1799ல திப்புசுல்தானோட வீழ்ச்சிக்கு அப்புறம் கிழக்கிந்தியகம்பெனியின் துனையோட மைசூர்மஹாராஜா'வோட ஆள்கைக்கு உடபட்டு இருந்ததுச்சுங்க.
அப்புறம் மொத்தமாக ஆங்கிலேயர்களின் கட்டுபாட்டுக்கு வந்து 1804ல ஒரே மாவட்டமாக ஒரே மாவட்டஆட்சியரோட அதிகாரத்துக்கு வந்துச்சுங்க.
பிற்ப்பாடு பல்வேறு ஆட்சி காரணங்களுக்காக, அது பல மாவட்டங்களா, தாலுக்காவா பிரிக்கப்பட்டது. இன்னைக்கு பல்வேறு தனிதனி அடையாளங்களோட இந்த ஊர்கள் இருந்தாலும், இன்னமும் அந்த 'கொங்குவாசம்' எல்லா ஊர்லயும் மிச்சமிருக்குதுங்க.

கொங்குநாடு'ங்கிற பேரு 'கொங்கு' அதாவது 'தேன்'ங்கிற வார்த்தையில இருந்து வந்ததாக சொல்றாங்க. (பள்ளிகூடத்துல படிச்ச 'கொங்குதேர் வாழ்க்கை..' ஞாபகம் இருக்குதுங்களா?). தேனீக்கள் நிறைஞ்ச பூஞ்சோலைகள் அடர்ந்த இடம்ன்னும், தேனீக்கள் போல சுறுசுறுப்பாக உழைக்கும் மக்கள் நிறைந்த இடம்ன்னு, ஓவ்வொருத்தரும் அவங்க அவங்க ஆசைக்குக்ம், கற்பனைக்கும் தகுந்த மாதிரி விளக்கமும் கொடுக்கறாங்க.

சில வரலாற்று ஆசிரியர்கள் இதையே வேற மாதிரியும் சொல்றாங்க. காங்கேயம்'ங்கிற ஊரை (காங்கேயம் காளை கேள்வி பட்டிருப்பீங்களே) தலைநகரா வச்சு அதை சுத்தியுள்ள பிரதேசத்தை காங்கேயநாடு அல்லது கங்கநாடு'ன்னு சொல்லபோயி, அது நாளைடைவில பெயர் மறுவி 'கொங்குநாடு'ன்னு ஆயிட்டதா சொல்றாங்க.

தமிழகத்தோட ஜீவநதியான காவேரியும், அந்த காவேரிக்கு தமிழகத்துல வலு சேர்க்கிற நொய்யல், பவானி, அமராவதி'ங்கிற பல ஆறுகள் குறுக்கே பாயற பிரதேசம்ங்கிறதால, கொஞ்சம் செழிப்பான பிரதேசமாத்தாங்க கொங்குதேசம் இருந்திருக்கு. இன்னைக்கு நம்மூர் ஆத்துல எல்லாம் தண்ணிய விட மணல்லாரி தான் ஜாஸ்த்தி ஓடுதுங்கிறது தான் உண்மைன்னாலும், முன்னே ரொம்ப செழிப்பா இருந்த்திருக்கு. இப்பவும் தமிழகத்தின் செழிப்பான பகுதிகள்ல கொங்குதேசத்துக்கு உட்பட்ட இடங்கள் தான் பிராதணமானது. இதை வச்சு தான்.
" கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்.
கொங்கில் வாழான் எங்கும் வாழான் "ன்னு எல்லாம் முன்ன சொல்லிவச்சாங்க போல.

சங்ககாலத்துல இருந்து இருக்கிற கொங்குதேசத்தோட வரலாற, அவ்வளவு சுளுவா ஒரு நாலு பத்தியில சொல்லமுடியாதுதான். இருந்தாலும் ஒரு ஆர்வத்துல எழுதியாச்சு. யாராவது கொங்குவரலாற்றுல ஆர்வமிருக்கிறவங்க இருந்தா, அப்படியே நூல் புடிச்சு உசரமா பறக்க விடுங்க பார்க்கலாம்.. :)

Comments

Anonymous said…
நல்ல செய்தி சொன்னீங்க கொங்கு நாட்ட பத்தி..ரொம்ப உபயோகமா இருந்திச்சு.. நன்றி.!
PONDHEEPANKAR said…
http://kongunadumaps.blogspot.com/
http://konguvellalagounderhistory.blogspot.com/
http://konguhistory.blogspot.com/
http://swadesipon.blogspot.com/

இதெல்லாம் எனது படைப்புகள். கொங்க சரித்திரம் பற்றி....பார்த்துட்டு சொல்லுங்க...

FYI...அந்த கங்கநாடு என்பதனை propose பண்ணுனது அடியேந்தான்! பல strong evidences இருந்தும்.....

சரி சரி....இந்தப் பாரதநாட்டுல சரித்திரமெழுத ஆதாரத்தவிட அரசியல்தான பிரதானமா இருக்குது! :(
நிறைய சொல்லுங்க!நல்ல தகவல்கள்.
Anonymous said…
Anna.. Palladam talukava vittutinga
Unknown said…
அண்ணா ஒருதத்ர் சொல்லறார் தொல்காப்பியம் வர பூழி நாடு தான் கொங்கு நாடு
கங்க நாடு மைசூர் இருக்கு னு சொல்லறார்
விளக்கம் கொடுங்கள் பூழி நாடு எது

கொஞ்சம் பேசிட்டன் அவரே சொல்லுங்க bro

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)