Skip to main content

4:நம்ம ஊரு சமையலேய்...

பச்சைக் கொள்ளு ரசம்

தேவையான பொருட்கள்
கொள்ளு - கால் கிலோ
புளிக்கரைச்சல் - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை

  1. கொள்ளை சுத்தம் செய்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. குக்கரில் வேகவைத்து எடுத்து மசித்து கொள்ளவும்.
  3. ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு வருத்துகொள்ளவும்.
  4. கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து பச்சை மிளகாய் மற்றும் புளிக்கரைச்சலை ஊற்றவும்.
  5. 4 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  6. மசித்து வைத்த கொள்ளுவை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
  7. நன்கு கொதி வந்ததும் இறக்கி வைத்து பறிமாறவும்.
  8. சளி,காய்ச்சலுக்கு சிறந்த மருந்து இது.

Comments

Anonymous said…
அப்பிடியே நம்மூரு அரிசிம்பருப்பு சோறு பத்தி போடுங்க...
கொள்ளு ரசம் நல்லாயிருக்குங்க சளி புடிச்சா நம்முருல அம்மாங்களோட முதல் வைத்தியம் இதுதான். சரி அடுத்த சமையல் எதுங்க. ரசம் வைக்க சொல்லித்தரவங்க பேர காணோம் ஊரு மட்டும்தான் இருக்கு?
Anonymous said…
மைக் டெஸ்ட்டிங்
Anonymous said…
என்னப்பா, கம்ப்ஞ்சோறு, ரவாஉப்புமா'ன்னு கிளப்புவீங்கன்னு பார்த்தா.. அமைதியா இருக்கீங்க..
கொள்ளு சாப்பிட்டால் உடல் இளைக்கும் ஐய்யா...
அதை சொல்லலியே.
Anonymous said…
1. Chelavu Rasam
2. Thanni Rasam
3. Paruppu rasam
4. Kollu rasam
5. Puli rasam
6. Arisium Paruppum
7. Kottamuthu idli (So called mallikai Idli)
8. Venthaya Idli (Kushbu Idli)
7. Kambang Kali
8. Rai Kali
9. Samai Soru

Athu oru kalam....Americavile thinkira Quizino, subway mmmmmm Kodumai samy....

Kongu Vellalan

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)